Tiruvannamalai

News February 21, 2026

FLASH தி.மலை: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

image

சட்டமன்ற தேர்தல் 2026ல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தி.மலையில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி, தி.மலையில் சு.விக்னேஷ், செங்கம் – ஷோபா, கலசப்பாக்கம் – சீதா, போளூர் – உமாதேவி பிரகாஷ், ஆரணி – தவமணி ரமேஷ், செய்யாறு – மு. தமிழ்ச்செல்வன், வந்தவாசி – கணேஷ், கீழ்பென்னாத்தூர் – வி. லோகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News February 21, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2. அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தி.மலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News February 21, 2026

தி.மலை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

தி.மலை மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 21, 2026

தி.மலை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News February 21, 2026

தி.மலையில் 2,000 பேருக்கு வேலை ரெடி!

image

செய்யாற்றில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இடம்: அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு. இதில் 120-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் நிறன் பயிற்சி நிறுவனங்கள், 2000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வினை நடத்தவுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

தி.மலை மாவட்டம் இரண்டாக பிரியுமா?

image

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். களம்பூரில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் அவர் பேசினார். மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.3,250 கோடி வருவாய் கிடைத்தும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்றார். மேலும் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News February 21, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது.6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!