India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதி வைத்திருந்தினர். ஆனால், மக்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க கூடாது என்பதற்காக அந்த தொலைபேசி எண்களை பெயிண்டால் அழித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் நடத்தும் கோ – ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார். அனைவரும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இவ்விழாவில், மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர், கோ அப் டெக்ஸ் மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தி.மலை மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்டோர், தங்களின் வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் அமைந்ததாக கூறி இடம் காலி செய்ய அறிவிப்பு வழங்கியதால், மாற்று இடத்தில் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இவர்கள் பல ஆண்டுகளாக வீட்டு வரி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளனர். தற்போது, இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டத் திட்டமிடப்பட்ட இடத்தில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
தி.மலையில் வரும் வெள்ளிக்கிழமை உடன் காலாண்டு தேர்வானது நிறைவடைகிறது.அதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சனி, ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என பார்த்தால் 2 நாட்கள் மட்டும் தான் காலாண்டு விடுமுறை அமைகிறது.எனவே, அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை விடவேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவண்ணாமலையில் இன்று தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் நடத்தும் கோ – ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை துவக்க விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் கோ – ஆப் டெக்ஸ் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாள்களில் சில சமூக விரோதிகள் சென்று சொத்துகளை சேதப்படுத்துதல், மரம், செடிகளை அழித்தல், சுற்றுச் சுவர்களில் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்தல் போன்ற விரும்பத் தகாத செயல்களை செய்து வருகின்றனா். இது போன்ற நபா்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.
ஆரணி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. விபத்து குறித்து டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். பைக் மீது மோதிய லாரி, திமிரியில் உள்ள ஒரு கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மேலும், லாரி ஓட்டுநரான விஸ்வநாதனை நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா, டிச.4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. டிச.13ஆம் தேதி மாலை திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
ஆரணி பைபாஸ் சாலையில் நேற்று இரவு விபத்து ஏற்படுத்தி மூன்று வாலிபர்கள் உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனத்தை ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து சாலையில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் சோதனை செய்ததில் விபத்து ஏற்படுத்திய லாரி திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்றது என்றும் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற ஓட்டுநரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.