India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
விண்ணமங்கலம் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து இன்று ஆற்று மணல் கடத்தி கொண்டு ஆரணி சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் கூட்ரோடு அருகே வந்த 6 மாட்டு வண்டிகளை ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மாட்டு வண்டிகளை ஆரணி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பண்ணைக் குட்டைகள், மண் வரப்பு அமைத்தல், கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலைத் துறை செடிகள் வளா்த்தல், தனிநபா் நிலங்களில் பல்வகை மரங்கள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செப்.30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 61.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கலசப்பாக்கம் 17 மி.மீ, குறைந்தபட்சமாக செய்யார் 1 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 12 மி.மீ, தண்டராம்பட்டு 11 மி.மீ, போளூர் 7.5 மி.மீ, திருவண்ணாமலை 6.6 மி.மீ, செங்கம் 2.2 மி.மீ, வெம்பாக்கம் 2.0 மி.மீ, சேத்பட் 1.4 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தனிநபர் நிலங்களில் மரம் நடுதல், மண் வரப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் செய்ய செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். விவசாயி சான்றிதழ், நில ஆவணங்கள், ஆதார், பணி அடையாள அட்டை, வங்கி கணக்கு நகல்கள் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கையில் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் 338 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும், ரூ.3.5 கோடி ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை & தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்கல்வி பயில்வதற்கான அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (26.09.2024) ஆலோசனை வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பவுர்ணமி உண்டியல் எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் 338 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும், 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரூபாய் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி இன்று (26.09.2024) நடைபெற்று வருகின்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.