Tiruvannamalai

News October 7, 2024

திருவண்ணாமலை புதிய எஸ்பி பொறுப்பேற்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரபாகர் பணியிடம் மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News October 7, 2024

திருவண்ணாமலை அருகே நாளை மின்தடை

image

ஆரணி, தண்டராம்பட்டு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ஆரணி டவுன்,சைதாப்பேட்டை, இ.பி.நகர்,கொசப்பாளையம்,சேவூர்,ரகுநாதபுரம், சேத்ப்ட்ரோடு,வெட்டியான்தொழவம்,குன்னத்தூர், அரியப்பாடி, முள்ளிப்பட்டு,ஹவுசிங் போர்ட், விண்ணமங்கலம், தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர், நாளாம்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

திருவண்ணாமலையில் திரைப்பட போஸ்டர் வெளியீடு

image

திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்கியுள்ளார். ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த்தி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதில் நடிகர்கள் அப்பு குட்டி, தீபா, காயத்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குருமூர்த்தி பாடல்கள்களை எழுதியுள்ள நிலையில் ஜெர்சன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 7, 2024

தி.மலையில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

தி.மலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை மாதிரி பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் அடிப்படைக் கட்டுமானங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவர்களை சந்தித்து ஊக்கமளித்தார். இந்நிகழ்வின் போது கல்வித்துறை அதிகாரிகள் மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 6, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 6, 2024

திருவண்ணாமலையில் நேர்காணல்

image

திருவண்ணாமலையில் உள்ள நீதிமன்றத்தில் புதியதாக அலுவலக பணியாளர்கான நேர்காணல் 6.10.2024 இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான நேர்காணல் கூட்டத்தில் சுமார் 200 பேர் கொண்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இன்று ஒரே நாட்களிலேயே தட்டச்சு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனி நபர் நேர்காணல் நிகழ்வும் நடைபெற்றது.

News October 6, 2024

14-ஆம் நூற்றாண்டு நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுப்பு

image

திருவண்ணாமலை, செய்யாறு அருகே பெருமாந்தாங்கல் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், இவை விஜயநகர காலத்துக்கு முந்திய அரிய சிற்பங்கள் என்றும், சிவலிங்கம், நந்தி, விநாயகர் ஆகிய உருவங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவை தற்போது அம்மன் கோயிலில் வழிபாட்டில் உள்ளன.

News October 6, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டு அதற்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை இணையத்தில் பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது. அந்தந்த தாலுகா அரசு மருத்துவமனைகளில் காலை 10 மணி முதல் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை ஷேர் செய்து பிறருக்கு உதவவும்.

News October 6, 2024

கைம்பெண்களுக்கு சுயதொழில் தொடங்க மானியம்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

தி.மலை: இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!