India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மனு அளித்து தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.
ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 52கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து போலீசார் சுப்பிரமணி (51), அவரது மகன் ராஜசேகர் (33) ஆகியோரை கைது செய்து, புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு வழியில் சென்று மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை இருகரம் கூப்பி வணங்கினார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்டம் சேத்துப்பட்டு, அப்பேடு, தச்சாம் பாடி, தேவிகாபுரம், ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை 8ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் வாரியம் கோட்ட பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
போளூர் அருகே உள்ள களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாக கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பருவ மழை காலங்களில் பள்ளி கட்டிடங்கள் தன்மை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் கல்வி திறனையும் மாணவர்களிடையே கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது கொடி நாள் வசூலில் ரூ.94.57 லட்சம் வசூல் செய்து சாதனை புரிந்தார். இதனை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மாவட்ட ஆட்சியரை பாராட்டி வழங்கிய சான்றிதழை இன்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.