India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் நவ.28 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும், 120 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. 18 பறக்கும் படைகளும் அமைக்கப்படும் என வேலூர் சரக்கு ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். 120 கார் பார்க்கிங் மையம் அமைக்கப்படும், 14 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என வேலூர் சரக்கு ஐஜி அஸ்ரா கார்க் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2391 வாக்குச்சாவடி மையங்களில், 2 நாள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 17,205 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 633 பேர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. முகாமுக்கு, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.