Tiruppur

News November 24, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

264 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: 4293 தீர்மானங்கள்

image

திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டு கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்கள் பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 264 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 4293 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News November 24, 2024

திருப்பூர் மக்களே.. படகு சவாரிக்கு தயாரா..?

image

திருப்பூர் மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. இங்கு, 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் உருவாக்க, 1.50 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கிய நிலையில் வரும், 26ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், இந்த படகு இல்லத்தை ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலமாக திறந்து வைக்க உள்ளார்.

News November 24, 2024

திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) சார்பில், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் ஆண்டு வருமான உச்சவரம்பு, கிராமப்புறத்துக்கு 98 ஆயிரம், நகர்புறத்துக்கு 1.20 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் அனைவருக்கும், ஆண்டு வருமான உச்சவரம்பு, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 24, 2024

தேசிய அளவிலான போட்டி: உடுமலை வீரர்கள் அபாரம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த வீரர்கள், தேசிய அளவிலான கூடைபந்தூ போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் 17 வயது பிரிவில், தமிழ்நாடு மாணவர்கள் இடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தினர். இந்த நிலையில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கல்வித்துறை சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News November 24, 2024

திருப்பூரில் பள்ளி மாணவர்களால் ஏற்பட்ட பரபரப்பு

image

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், பஸ் நிலையத்துக்குள் அங்குமிங்கும் ஓடினார்கள். உடனடியாக அங்கிருந்த தெற்கு போலீஸார் விரைந்து சென்று மாணவர்களைப் பிடிக்க துரத்தினார்கள். அதற்குள் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடித் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News November 23, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை 

image

காங்கேயத்தில் நாய்கள் கடித்ததில் இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை சம்மந்தமாக கொள்கை முடிவெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை சம்பந்தமாக ஆவண செய்வதாக அவர் உறுதியளித்தார்.

News November 23, 2024

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (23.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News November 23, 2024

சிறுபான்மையினர் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனி நபர் கடன், மகளிர் சுய உதவி குழு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தகுதியுடையோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 23, 2024

தேசிய அளவில் திருப்பூர் மாணவர் அசத்தல்

image

கொல்கத்தாவில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய சதுரங்க போட்டி நவ. 19 முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழக அணி சார்பில், 20 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களில், ஒருவரான, திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல்கிருஷ்ணா, 6-4 செட் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

error: Content is protected !!