India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 07.03.2026 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்துள்ளார். உடுமலைப் பகுதியோடு குடும்ப ரீதியான நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருப்பது அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்துள்ளார். உடுமலைப் பகுதியோடு குடும்ப ரீதியான நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருப்பது அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், பசுபதி ஆகியோரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், பசுபதி ஆகியோரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.