Tiruppur

News December 14, 2024

திருப்பூரில் 491.90 மீட்டர் மழைப்பொழிவு

image

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் 20மி.மீ ,தெற்கு பகுதியில் 21 மி.மீ, தாராபுரத்தில் 32 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 52 மி.மீ, காங்கேயம் அடுத்த வட்டமலை கரை ஓடை பகுதியில் 36.20 மி.மீ, வெள்ளகோவிலில் 20 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 30 மி.மீ என மாவட்டம் முழுவதும் 491.90 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 24.60 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

துப்பாக்கியுடன் வாகனத் தணிக்கையில் போலீசார்

image

திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுத்திடும் வகையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தோட்டக்களுடன் கூடிய துப்பாக்கியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஊரகப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், மாவட்ட எஸ்.பி உத்தரவை அடுத்து துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News December 13, 2024

திருப்பூர் தலைப்புச் செய்திகள்

image

1.திருப்பூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
3.மழையால் இடிந்த வீட்டின் ஓடுகள்!
4.காட்டாற்று வெள்ளத்தால் பூஜைகள் நிறுத்தம்
5.மலைவாழ் மக்களின் கடைகள் அடித்துச் சென்ற வெள்ளம்

News December 13, 2024

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (13.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News December 13, 2024

அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்று அதிகாலை 4 மணி முதல் இன்றுவரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமராவதி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழுமம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனை எடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.

News December 13, 2024

அமராவதி ஆற்றங்கரையில் அமைச்சர் ஆய்வு

image

திருப்பூர், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் இன்று காலை அதிகாலையில் இருந்து காட்டாற்று வெள்ளத்தால் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு சென்றது. இதனை அறிந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். மேலும் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடு சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.

News December 13, 2024

திருப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

திருப்பூர் வருகை தரும் துணை முதல்வர்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க, திருப்பூர் வருகை தர உள்ளார். அரசின் வளர்ச்சி திட்டங்கள் மாவட்டத்தில் எந்த அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

News December 12, 2024

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (12.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News December 12, 2024

திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு

image

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, தொழில்வரி, உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து, வருகின்ற 18ஆம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!