Tiruppur

News November 24, 2024

திருப்பூரில் பள்ளி மாணவர்களால் ஏற்பட்ட பரபரப்பு

image

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், பஸ் நிலையத்துக்குள் அங்குமிங்கும் ஓடினார்கள். உடனடியாக அங்கிருந்த தெற்கு போலீஸார் விரைந்து சென்று மாணவர்களைப் பிடிக்க துரத்தினார்கள். அதற்குள் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடித் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News November 23, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை 

image

காங்கேயத்தில் நாய்கள் கடித்ததில் இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை சம்மந்தமாக கொள்கை முடிவெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை சம்பந்தமாக ஆவண செய்வதாக அவர் உறுதியளித்தார்.

News November 23, 2024

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (23.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News November 23, 2024

சிறுபான்மையினர் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனி நபர் கடன், மகளிர் சுய உதவி குழு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தகுதியுடையோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 23, 2024

தேசிய அளவில் திருப்பூர் மாணவர் அசத்தல்

image

கொல்கத்தாவில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய சதுரங்க போட்டி நவ. 19 முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழக அணி சார்பில், 20 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களில், ஒருவரான, திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல்கிருஷ்ணா, 6-4 செட் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

News November 22, 2024

இளைஞர் திறன் விழா: கலெக்டர் தகவல்

image

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, இளைஞர் திறன் திருவிழா வருகிற 26-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 22, 2024

திருப்பூரில் நாளை வாக்காளர் பட்டியல் முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) (ம) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (22.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.

News November 22, 2024

தண்ணீரைக் காய்ச்சி பருக ஆணையாளர் அறிவுறுத்தல்

image

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2, 3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்திலிருந்து விநியோகம் செய்யும் நீரேற்று பகுதிகள் என மேட்டுப்பாளையம் பவானி ஆற்று படுகை மற்றும் பவானி காவேரி ஆற்றுப்படுகையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்படக்கூடிய நீரை காய்ச்சி பருக ஆணையாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்

News November 21, 2024

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (21.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!