Tiruppur

News December 3, 2024

திருப்பூரில் கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News December 3, 2024

‘தமிழகத்தில் உளவுத்துறை செயல்படவில்லை’

image

இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வலுவற்ற அரசாங்கமாக திமுக அரசு இருப்பதாகவும், தமிழகத்தில் உளவுத்துறை சரியாக செயல்படுவதில்லை என குற்றம் சாட்டினார். குற்றவாளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாக தெரிவித்தார்.

News December 3, 2024

திருப்பூரில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (02.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 425 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, சாலை வசதி, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 425 மனுக்கள் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

திருப்பூர் வருகை தரும் சீமான்

image

திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திற்காக வருகின்ற 4ஆம் தேதி காங்கேயம் பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்து நிர்வாகிகள் மத்தியில் கலந்துரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வருகின்றனர்.

News December 2, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மழை

image

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(2.12.24) கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 1, 2024

திருப்பூரில் திடீர் ரெய்டு: அழுகிய மீன்கள் பறிமுதல்

image

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் இன்று திடீர் சோதனை செய்தனர். சோதனையில் 31 கிலோ கெட்டுப்போன மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுத்தம் செய்யப்படும் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பின்பற்ற அறிவுறுத்தினர்.

News December 1, 2024

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (01.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

அவிநாசி கொலை சம்பவம்: ஈபிஎஸ் கண்டனம்

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

கொலை சம்பவம்: உறவினர்களிடம் கைரேகை சேகரிப்பு

image

திருப்பூர்: பல்லடம் அருகே சேமலைகவுண்டன் பாளையத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 11 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப உறவினர்களிடம் போலீசார் சார்பில் கைரேகை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!