India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், எட்டு தொகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டனர். இந்நிலையில் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் இறந்தவர்களின் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படாமல் உள்ளது.
➤ திருப்பூரில் 330 கிலோ சைனா பூண்டு பறிமுதல் ➤ பல்லடம் அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை ➤ அவிநாசியில் கொடூர கொலை: குற்றவாளிகள் 5 பேர் கைது ➤ திருப்பூரில் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம் ➤ திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு ➤ பல்லடம் கொலை சம்பவம்: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு ➤ தளவாவாய் பட்டணத்தில் மிதமான மழை
திருப்பூர் காட்டன் மில் ரோடு பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவன தொழிலாளர்களான முருகன் ,தங்கப்பிள்ளை தம்பதியின் மகள் அனிதா. இவர் கம்போடியா நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். மேலும், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் முயற்சியில் வெளிநாடு சென்று வெள்ளி பதக்கம் பெற்றார். இந்நிலையில் இவருக்கு துணை மேயர் நேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பொங்கலூர் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு இவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும், கடந்த மாதம் 29ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து மொத்தம் 16 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம், குறு, சிறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு, பவர் டில்லர் பெறுவதற்கு, அதிகபட்சம் 1.20 லட்சம் ரூபாய்; களையெடுப்பான்களுக்கு அதிகபட்சம் 63 ஆயிரம் ரூபாய், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பல்லடம், சேமலைகவுண்டம்பாளையம் 3 பேர் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு, நேரில் சென்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி அர்ஜுன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார். மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை, கடுமையான தண்டனையான என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று, ஆவேசமாக பேட்டியளித்தார். மேலும் பல்லடத்தில் இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் பொருட்களை வைத்தல், வாகனங்களை இயக்கு தல், நீண்ட நேரம் தண்டவாளத்தில் பிரவேசித்தல், சாகசங்களை செய்து வீடியோ எடுத்தல், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் போன்ற சாகச ரீல்ஸ் எடுப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு இமாச்சல் பிரதேசம் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மழை காரணமாக வரத்து குறைந்து இருப்பதால் பூண்டு விலை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி சைனா பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சைனா பூண்டு, கண்டறியப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையால் 330 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்ட,ம் ஊத்துக்குளி அருகே, தொட்டிபாளையம் பகுதியில், ஒரு வீட்டில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, கட்டிடத் தொழிலாளி சுராஜித், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் இருந்த அவர், மன உளைச்சல் அடைந்து, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சிசேரி, சின்ன வீரன் பட்டி, சங்கர் நகர் உட்பட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.