India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில், எம்.பி சுப்பராயன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வாடகை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது மூலம், திருப்பூரில் உள்ள, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மிகப்பெரும் பாதிப்பை அடையும். ஏராளமானவருக்கு தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய, ஜவுளி தொழிலை, பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில், உயர்த்தப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரி, தொழிலை நாசம் செய்யும்” என தெரிவித்துள்ளார்
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக சொத்து உயர்வை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளைய தினம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, இடுவம்பாளையம், கோவில் வழி உள்ளிட்ட 32 இடங்களில் கண்டன தெருமுனை பிரச்சாரம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடிமக்களும் கபீர் புரஸ்கார் விருது வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இவ்விருதை விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு இணையதளமான www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (07.12.2024) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், அவிநாசிபாளையத்தில், 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 9 நாட்கள் ஆகியும், துப்பு துலக்க முடியாமல் போலீசார் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணையை விரிவுபடுத்தி இருந்தாலும், இதுவரை கொலையாளிகள் தொடர்பாக முறையாகத் தகவல் கிடைக்கவில்லை. கொலை நிகழ்ந்த இடத்தில் கிடந்த சிகரெட் துண்டை வைத்து, போலீசார் துப்பு துலக்க முயற்சித்து வருகின்றனர்.
திருப்பூர், ரயில் நிலையத்தின் முன் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக 2 மூட்டைகள் இருப்பதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று அந்த மூட்டைகளை கைபற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட, 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.
திருப்பூரில் இன்று(7.12.24) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி திருப்பூரில், உடுமலை, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், சீல நாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.