India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கேயம் அருகே வெள்ளகோவில் செமண்டம்பாளையத்தில் கடந்த 10ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி, மாணவி ஸ்ரீ ராகவி ஆகியோர் பலியாகினார். இவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகைக்கான காசோலையை நேற்று செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.
சொத்து வரி உயர்வு, கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில், மாபெரும் கடையடைப்பு போராட்டம், வருகின்ற புதன்கிழமை (டிச.18) நடைபெற உள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டன் பாளையத்தில் கடந்த 28ஆம் தேதி விவசாயி தெய்வசிகாமணி அவரது மனைவி, மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தோட்டத்தில் வேலை செய்து வந்தவரின் மகனான பால்ராஜ் என்பவரை, கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி காவல்துறையினர், சித்திரவதை செய்வதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்ராஜ் இன்று புகார் மனு அளித்தார்.
திருப்பூர் மாநகரில் இன்று (14.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
திருப்பூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பாறைக்குளியில், குப்பைகள் கொட்டுவது குறித்து, ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி, டிசம்பர் 16 -ஆம் தேதி முதல், ஜனவரி 20-ஆம் தேதி வரை செலுத்தப்படும் என அறிவித்தார். இந்த வாய்ப்பை அனைத்து கால்நடை வளர்ப்போரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரத்தின் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வழக்கத்தைவிட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நடப்பு வாரம் இன்றும், நாளையும், 60 சிறப்பு பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா 15 மற்றும் 10 பஸ்களும் என 60 சிறப்பு பஸ்கள் இயங்கும்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் 20மி.மீ ,தெற்கு பகுதியில் 21 மி.மீ, தாராபுரத்தில் 32 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 52 மி.மீ, காங்கேயம் அடுத்த வட்டமலை கரை ஓடை பகுதியில் 36.20 மி.மீ, வெள்ளகோவிலில் 20 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 30 மி.மீ என மாவட்டம் முழுவதும் 491.90 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 24.60 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுத்திடும் வகையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தோட்டக்களுடன் கூடிய துப்பாக்கியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஊரகப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், மாவட்ட எஸ்.பி உத்தரவை அடுத்து துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1.திருப்பூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
3.மழையால் இடிந்த வீட்டின் ஓடுகள்!
4.காட்டாற்று வெள்ளத்தால் பூஜைகள் நிறுத்தம்
5.மலைவாழ் மக்களின் கடைகள் அடித்துச் சென்ற வெள்ளம்
Sorry, no posts matched your criteria.