India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேவையுள்ள பொதுமக்கள், அந்தந்த பகுதி போலீசாரை நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம். மேலும், அவசர நிலைமைகளில் எப்போதும் 100 எண்ணை அணுகலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

திருப்பூர், ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, திருப்பூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

திருப்பூர் மக்களே.., பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வில்லங்கச் சான்றிதழ் வாங்குவதில் சிரமமா..? அங்கே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதா..? இனி கவலை வேண்டாம். <

திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம் காங்கேயம் தாராபுரம் பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றுகிறது. இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(செப்.1) அப்பகுதி தெரு நாய்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தாசில்தார் எண்கள் கீழ் வருமாறு:
▶️திருப்பூர் வடக்கு: 9445000574
▶️பல்லடம்: 9445000573
▶️தாராபுரம்:9445000565
▶️காங்கேயம்:9445000566
▶️உடுமலைப்பேட்டை:9445000578
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பூரில் சாந்தி தியேட்டர் தெரியாத ஆளை பார்க்கவே முடியாது. ஏறத்தாழ 45 அண்டுகளுக்கும் மேலாக விசில் சத்தங்கள், ஆரவாரங்கள் என திருப்பூர்வாசிகளின் வாழ்வியலில் கலந்திருந்த சாந்தி தியேட்டர் தற்போது மல்டி பிளக்ஸ் வருகையால் நலிவடைந்து, குடோனாக மாறியுள்ளது. இந்தத் தியேட்டரில் நீங்கள் பார்த்த மறக்க முடியாத திரைப்பட அனுபவங்கள், கதைகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க. நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. பிரம்மாண்ட ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் 8 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.