India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் ரோபோடிக் முறையில் ஒரு பெண்ணுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு குமாரபாளையத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் நீண்ட காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர். இதில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் பதவி விலக வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயக்குமார் பேசினார். தமிழில் பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் மொட்டுமரி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்திற்குட்பட்ட கோவை-திருப்பூர் ஈரோடு வழியாக செல்லும் வாராந்திர ரயில்கள் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே திருவனந்தபுரம் கோர்பா வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வழி பகுதியில் அருன்பாபு என்பவரை கல்லால் தாக்கிய வழக்கில் அரவிந்த், கருப்பசாமி, கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மூவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி, காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் மற்றும், எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி உள்படஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பலரும் கருப்பு சட்டை அணிந்தபடி பங்கேற்றனர்.
பல்லடம் அடுத்த அணுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் இரும்பு உருக்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் காரணமாக பகுதியில் பல்வேறு விதமான நோய் பரவும் அபாயமும் நிலத்தடி நீர் மாசும் ஏற்படும் சூழல் நிலவுவதால் அதனை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று 640ஆம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன்கள் விவேக் (35), அசோக் (30). சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில் அசோக்கை இரும்புக் கம்பியால் தாக்கி விவேக் நண்பரின் உதவியுடன் கொலை செய்து சாலையில் போட்டு விபத்து போல் நாடகமாடியுள்ளது சேவூர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான இருவரையும் போலீசார் நேற்று பொங்கலூர் அருகே கைது செய்தனர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21,571 மதிப்பிலான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மேலும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட திருக்கு விநாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு & பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.