India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் மிக முக்கிய பங்காற்றுகிறது திருப்பூர் தொழில் நகரம். கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்த பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் தொடங்கி நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் 25 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்திருப்பதாகவும், இன்னும் 4 மாத காலத்தில், 40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடையும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், அவிநாசி, மங்கலம் சாலையில், லாரி, கார் நேருக்கு நேர் மோதி, இன்று விபத்து ஏற்பட்டது. இதில் பழங்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பெருமாகவுண்டம்பாளையம் பகுதியில் பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பாதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 34வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது விமான நிலையம் வரை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது பாதையில் மாற்றி விடப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் சென்றுவருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. நேற்று பல்லடத்திலிருந்து அழகுமலை நோக்கி சென்ற வேனும், கோவையை நோக்கி சென்ற காரும் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
திருப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (டிச.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி-மாலை 4 மணி வரை அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதி, காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே- அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன்வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.
➤திருப்பூர் மாவட்டத்தில் இன்று கலைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ➤திருப்பூரில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மீது நடவடிக்கை ➤தூத்துக்குடி அருகே நடைபெற்ற விபத்தில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலி ➤மாவட்டம் முழுவதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤ரோபோடிக் அறுவை சிகிச்சை: திருப்பூர் மருத்துவர்கள் சாதனை.
திருப்பூர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை& திருப்பூர் மாவட்ட கிருஸ்துவ அமைப்பு சார்பில், திருப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ செல்வராஜ் பங்கேற்று, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். பேருந்து நிலையத்தில் இருந்த குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனித வள மேலாண்மை மேம்பாட்டு துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மத நல்லிணக்க சமூகம், அமைதியும் அன்பும் நிலைத்திட வேண்டும் என கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ்(34), செல்வராஜ்(42), விஜயகுமார்(29). இவர்கள் இன்று(டிச.25) காரில் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தபோது, எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.