India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் வேலை தேடுபவரா நீங்கள்? கவலை வேண்டாம்! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திர ஆப்பரேட்டர் பயிற்சி நாளை(செப்.4) முதல் திருப்பூரிலேயே வழங்கப்படவுள்ளது. இது, 70 நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சியாகும். இந்தப் பயிற்சியில் பங்கேற்றால் வேலையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்பேசி எண்கள் ஏரியா வாரியாக தினமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்கான ரோந்து பொறுப்பாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் எந்தவொரு குற்றச்செயல்களையும் நேரடியாக போலீசாருக்கு அறிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இங்கே <

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

திருப்பூர் மாவட்ட காவல்துறை தங்கள் வலைதளத்தில் இன்று (செப்டம்பர் 2) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இந்திய சட்டத்தின்படி போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் உருவாக்கி பரப்புவது குற்றமென தெரிவித்துள்ளது. பொதுமக்கள் உண்மையற்ற தகவல்களை பரப்பாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் இளநிலை உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுஜாத் அலி, இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் சேலம் மாநகராட்சிக்கு இளநிலை பொறியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் மக்களே, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். உதவும் உள்ளம் கொண்ட திருப்பூர் மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

கோவை சரக டி.ஐ.ஜி சசி மோகனின் உத்தரவுப்படி முனிசாமி , ராம்பிரபு, யமுனாதேவி, ராதாகிருஷ்ணன், வேல்முருகன், கவிதா, சித்ராதேவி, சரோஜா , கோமதி ஆகிய இன்ஸ்பெக்டர்கள் இதர மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூரில் பணியாற்றிய கோவர்த்தனாம்பிகை, அனந்தநாயகி, அம்பிகா மேலும் மூன்று பேர் இதர மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேவையுள்ள பொதுமக்கள், அந்தந்த பகுதி போலீசாரை நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம். மேலும், அவசர நிலைமைகளில் எப்போதும் 100 எண்ணை அணுகலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.