Tiruppur

News January 5, 2025

50 குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட ஆணை வழங்கல்

image

பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில், கே.எஸ்.கே., அறக்கட்டளை சார்பில், 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் விழா நேற்று நடந்தது. தேர்வு செய்யப்பட்ட, 50 பெண் குழந்தைகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், 250 ரூபாய் செலுத்துவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பல்லடம் தபால் அலுவலக போஸ்ட் மாஸ்டர் சுரேஷ் தலைமை வகித்தார்.

News January 4, 2025

திருப்பூர்: வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டத்தில், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலத்தில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த அலோம் சேக் (40), அமினூர் (20), சோகைல் (25), கைரூல் (25), ரோஷன் (35), வாஹித் (40), ஹிருதய் (22) மற்றும் கொங்கூன் (22) என 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2025

கோவை-கயா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

கோவை கயா இடையே பயணிகளின் வசதிக்காக திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் இன்று முதல் சனிக்கிழமைகளில் இரவு 7:35 மணியளவில் கயாவில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு கோவை சென்றடையும் என கோவை ரயில்வே கோட்ட அதிகாரி மாரியா மைக்கேல் நேற்று தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

கடந்த ஆண்டில் ரயிலில் அடிபட்டு 112 பேர் பலி

image

திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி 12 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ரயில் முன் பாய்ந்து பத்து பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

News January 4, 2025

திருப்பூர்: ரூ.5000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை

image

திருப்பூர் ஈட்டி வீரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர். இவர் 2013ஆம் ஆண்டு தனது ஒப்பந்த உரிமையை புதுப்பிக்க திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை புதுப்பிக்க சரவணன் என்பவருக்கு ஐந்தாயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.

News January 4, 2025

துங்காவி தலைவருக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது

image

உடுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி துங்காவி ஊராட்சி மன்ற தலைவராக 5 ஆண்டு பணி நிறைவு செய்து சிறப்பாக செயல்பட்ட துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் கே.உமாதேவி காளீஸ்வரனுக்கு விஜய் TV நீயா நானா புகழ் கோபிநாத் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது வழங்கி பாராட்டினார்.

News January 3, 2025

திரூப்பூர் தலைப்புச் செய்திகள்

image

1. திரூப்பூர் மாவட்டத்தில் வேலுநாச்சியார் பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.
2.உடுமலை அருகே கைதி திடீர் உயிரிழப்பு!.
3.திருப்பூர்: “ இனி கடுமையான நடவடிக்கை”- டி.எஸ்.பி எச்சரிக்கை
4.திருப்பூரில் நாளை சைக்கிள் போட்டி மாணவ மாணவிகளே ரெடி ஆகிக்கோங்க!
5. மூலனூரில் தேசிய பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு

News January 3, 2025

திருப்பூர் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 3, 2025

திருப்பூர் :சைக்கிள் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் சைக்கிள் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரியப்பட்டுள்ளது.

News January 3, 2025

கட்டபொம்மன் பிறந்தநாள் திருப்பூர் மேயர் மரியாதை

image

திருப்பூரில், விடுதலை போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மன், 266வது பிறந்தநாளில், அவரது திருவுருவப் படத்திற்கு, திருப்புர் மேயர் தினேஷ்குமார் மற்றும் செல்வராஜ் MLA இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!