India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகை தந்து கொண்டிருக்கின்ற நிலையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சில வருடங்களாக இயந்திரங்கள் பழுது காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூபாய் 38,60,000 மதிப்புள்ள 2000 கிலோ கஞ்சா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகர போலீஸ்சார் அழித்தனர். உடன் கஞ்சா அழிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையிலும் திருப்பூர் நீதித்துறை நீதிபதிகள் முன்னிலையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4,5ஆம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 48 இலட்சத்தில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 73 இலட்சத்தில் 7 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேயம், படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி செளமியா (23). இவருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் செளமியா கடந்த ஒரு வாரமாக கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் ஜீவா அழைத்து செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செளமியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.