Tiruppur

News January 7, 2025

திருப்பூர் வரை நீட்டிக்கப்பட்டும் மெட்ரோ ரயில்

image

தொழில் நகரமான கோவை வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை தொழில் நகரமான திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாக திருப்பூர் வரை மெட்ரோ ரயிலின் உத்தேச பாதை வழித்தடங்கள் அடங்கிய விளம்பர பதாகை மாநகராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டு, முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

திருப்பூர்: அண்ணாமலையை சந்தித்த முன்னாள் சேர்மன்

image

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் புகழ்பெற்ற காளை சிலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காங்கேயம் முன்னாள் யூனியன் சேர்மன் மகேஷ் குமார் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து காங்கேயத்தில் காளை சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதற்கான இடையூறு பிரச்சனைகள் குறித்தும் நேரில் எடுத்துரைத்தார்.

News January 6, 2025

தேசிய அளவிலான போட்டி: மாணவர்கள் சாதனை

image

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 68வது தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டி ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடிய குமுதா பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். நேற்று அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News January 6, 2025

ஊத்துக்குளி அருகே பஸ் மோதி 20 பேர் காயம்

image

கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை செங்கப்பள்ளி அருகே கஸ்தூர்பாளையம் பிரிவு அருகே வந்தபோது முன்னாள் சென்ற தனியார் பஸ் இரண்டும் நேற்று மோதியது. இந்த பேருந்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2025

கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்த திட்டம்

image

திருப்பூரை சேர்ந்த சத்தியநாராயணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். சக மாணவர்கள் ‘ராகிங்” செய்து தாக்கியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

News January 6, 2025

வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

image

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபைதொகுகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்.29 முதல் நவ 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

News January 6, 2025

உடுமலை விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 113 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு 9 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 5, 2025

ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநிலத்தவர்கள்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட உள்ளது. திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் 12ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை விடுமுறை விடக்கூடிய நிலையில் சொந்த ஊர் செல்லும் வட மாநிலத்தவர்கள் இன்று முதல் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கினர்.

News January 5, 2025

திருப்பூர் மாணவர் தற்கொலை: 3 பேர் சஸ்பெண்ட்

image

கோவை தனியார் கல்லூரியில் சத்யநாராயணா என்ற மாணவனை பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த சத்யநாராயணா திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவரும் நிலையில் சத்யநாராயணாவை தாக்கிய மூன்று மாணவர்கள் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!