Tiruppur

News January 9, 2025

திருப்பூரில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பாதிப்பு இல்லை

image

‘ ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணி, பூச்சிகளால் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் ஏற்படுகிறது. மலைப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட மலை பகுதிகளில் ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

News January 9, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் வினியோகம்

image

திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து அரிசி கார்டுகள், போலீஸ் கார்டு, ஓ.ஏ.பி., கார்டு, இலங்கை தமிழர் கார்டு என, மொத்தம், 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுகள் உள்ளனர். இவர்கள் அணைவருக்கும்இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பானது இன்று முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News January 8, 2025

திருப்பூரிலிருந்து 502 சிறப்பு பேருந்துகள்

image

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற 10ஆம் தேதி முதல், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்காக, 502 சிறப்பு பேருந்துகள், திருப்பூரிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு அறிவிப்பு

image

பிப்ரவரி மாதம் தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, தாராபுரம் வழியாக, பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தாராபுரம் நகர் பகுதி வழியாக செல்லுமாறு, ஐடிஐ கல்லூரி முன்பாக, தாராபுரம் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

திருப்பூரில் நூதன விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

image

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள, சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் சார்பில் போதைப்பொருள், தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், முகத்தில் வர்ணம் பூசியவாறு, போதைப்பொருள் பழக்கத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌‌. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார்.

News January 8, 2025

40 முதல் 49 வயது வாக்காளர்கள் அதிகம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 38 ஆயிரத்து 906 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 40 முதல் 49 வயது உட்பட்ட வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். நேற்று முன்தினம்  வாக்காளர் பட்டியல் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 24 லட்சத்து 15,608 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 8, 2025

தாராபுரம் அருகே விபத்து

image

தாராபுரம் தேசிய நெடுஞ்சாலை தனியார் கல்லூரி அருகே தாராபுரம் சாலையில் இருந்து இன்று காலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்தில் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2025

பெண் குழந்தைகள் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு ஒரு பெண் குழந்தையெனில் 50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தையெனில் தலா 25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

காய்ச்சலுக்கு எஸ்.எஸ்.ஐ பலி

image

தாராபுரத்தில் காய்ச்சலுக்கு பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐயா சுதா(47) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, கடந்த 4 நாள்களாக திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

News January 7, 2025

கண்காணிப்பு கேமராவுடன் கட்டுப்பாட்டு அறை

image

பல்லடம் ஒன்றியம் செல்விபாளையம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஊராட்சியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராவுடன் தட்டுப்பாட்டு வரை நேற்று அமைக்கப்பட்டது.

error: Content is protected !!