Tiruppur

News September 11, 2025

திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

image

தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் துாதில்லா ஸ்ரீதர்பாபு, நேற்று(செப்.10) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க விழாவில் பேசியதாவது ’ஐந்து ஆண்டுகளுக்கு, யூனிட்டுக்கு, ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும். ஏழு ஆண்டுகள் வரை, ஜி.எஸ்.டி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். போக்குவரத்து மானியமாக, 25 சதவீதம், அதிகபட்சம் 75 சதவீதம் வரை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்’ என்றார்.

News September 11, 2025

திருப்பூர்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திருப்பூர்: தொலைந்த சான்றிதழ்களை மீட்பது எப்படி?

image

திருப்பூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த<<>> லிங்கில் சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. உடனே SHARE!

News September 11, 2025

திருப்பூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

திருப்பூர் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21ஆம் தேதியே கடைசி நாள். உடனே SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திருப்பூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திருப்பூர்: வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒருவர் கைது!

image

திருப்பூர்: தாராபுரம் பகுதியில் ஜூலை மாதம் 28ஆம் தேதி பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி அருகே வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூலிப்படை மற்றும் பள்ளி தாளாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஆறு பேருக்கு குண்டாஸ் சட்டம் பாய்ந்த நிலையில் நேற்று(செப்.10) கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

News September 11, 2025

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

தபால் சேவையைப் பற்றி விவாதிக்க திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 26ம்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை மற்றும் புகார்களை பட்டாபிராமன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர், செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 10, 2025

திருப்பூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

திருப்பூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருப்பூர்: SUPER சம்பளம் மத்திய அரசில் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க செப்.14 கடைசி தேதியாகும். நன்றி மறவாத திருப்பூர் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்

error: Content is protected !!