Tiruppur

News January 16, 2025

திருப்பூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

image

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, 2வது ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. இவர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நகரப் பேருந்தில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். வந்து பார்த்தபோது பையில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2025

திருப்பூர்: நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

image

திருப்பூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது பொங்கலுக்கு சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் (17ஆம் தேதி) இரவு முதல், 19ஆம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பூர் மண்டலப் போக்குவர்த்து கழகம் செய்து வருகிறது. 

News January 16, 2025

திருப்பூர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது

image

திருப்பூரில், பொங்கல் விடுமுறை காரணமாக, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், திருப்பூரில் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் நேற்று, வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு, 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளும் தொடர் விடுமுறையில் இருப்பதால், திருப்பூர் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

News January 15, 2025

பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞருக்கு பாராட்டு

image

நொய்யல் நதிக்கரையோரம் நடைபெற்று வரும் திருப்பூர் பொங்கல் திருவிழா 2025இல் கும்மி கலையை பயிற்றுவித்ததற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆசிரியர் பத்ரப்பனுக்கு அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதே போல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News January 15, 2025

திருப்பூர் மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 13ஆம் தேதி ராஜமாணிக்கம் மற்றும் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News January 15, 2025

திருப்பூர் மனைவிக்கு தடை தாண்டும் போட்டியில் தங்கம்

image

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68வது தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 80 மீ தடை தாண்டும் போட்டியில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியின் மாணவியும், தடகள வீராங்கனையுமான வர்ஷிகா முதலிடம் பெற்றதுடன், தங்கப்பதக்கம் வென்று, திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

News January 15, 2025

மடத்துக்குளம் அருகே தப்பி ஓடிய குற்றவாளி கைது

image

மடத்துக்குளத்தை சேர்ந்த முருகானந்தம், சில தினங்களுக்கு முன், பைக் திருட்டில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல் துறையை ஏமாற்றி, முருகானந்தம் தப்பி ஓடினார். அவரை பிடிக்க ஆய்வாளர் அருள் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு, பூளவாடி பகுதியில், பதுங்கியிருந்த போது, காவல்துறையினர், முருகானந்தத்தை கைது செய்தனர்.

News January 14, 2025

கோலத்தால் பாடம் நடத்தும் ஆசிரியை

image

கோலமிடுவதில் பலவகை உண்டு ரங்கோலி, புள்ளி வைத்த கோலம், டிசைன் போடும் என ஆனால் அதில் ஒரு செய்தியை தெரிவிப்பது என்பது மிக அரிது. மீறிப் போனால், பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து தீபாவளி வாழ்த்து ஆகிற தெரிவிப்பார்கள் ஆனால் ஒரு ஆங்கில பேராசிரியர் பாடம் எடுக்கும் விதமாக இவ்வகை கோலத்தை வரைந்துள்ளார். இதில் அவர் ஆங்கில இலக்கணத்தை புகுத்தியுள்ளார்.

News January 14, 2025

திருப்பூர் மாணவி தங்கம் வென்று சாதனை

image

தேசிய அளவில் இந்திய பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு குழுமம் சார்பில், கடந்த 7ஆம் தேதி முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் காதர் பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷிகா 14 வயதிற்குட்பட்டார் பிரிவில் 80 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News January 13, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (ஜன.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரம் வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!