India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் விக்னேஷ். கடந்த 2022 ஆம் ஆண்டு, திருப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், மோகன் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில், மோகன் விக்னேஷுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு தெற்கு அவிநாசி பல்லடம் ஊத்துக்குளி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று மாலை திருப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலிங் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருப்ப பணியிட மாறுதல் அதன்படி 55 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி 31-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்
திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் சிறார்களுக்கான இந்த போக்சோ வழக்கு குறித்த விசாரணை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில், இளம் சிறார் நீதி குழுத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் சிறார்களுக்கான இந்த போக்சோ வழக்கு குறித்த விசாரணை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் இளம் சிறார் நீதி குழுத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் 31-ம் தேதி காலை 10.20 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்குகிறார். கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தத் தகவலை மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வட்டார மட்டும் தாலுகா அளவில் குழந்தை பாதுகாப்பு குழு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன் ஸ்டீபன் வீட்டில் அருகே உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டீபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் என்ற போர்வையில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தினர் கைதாகி இதுவரை என்பதற்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், நேற்று வாவிபாளையம் பகுதியில் தங்கியிருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். நல்லூர் பகுதியில் தங்கியிருந்த 11 பேர் கைது என குறிப்பிடதக்கது.
காங்கேயம் என்றால் நம் எல்லோருக்கும் காளைகள் தான் நியாபகம் வரும். ஆனால் காங்கேயத்தின் இன்னொரு சிறப்பு, சுத்தமான பசு நெய் தான். நீங்கள் காங்கேயம் சென்றால் அந்த காற்றில் நெய் மனத்தை உணரலாம். இது காங்கேயம் மாட்டுப்பாலில் இருந்து தயாரிக்கப்படும், உயர் தூய்மை கொண்ட நெய். பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த நெய், ஒரு தனித்துவமான நறுமணம், சுவை கொண்டது. இது பல்வேறு ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
Sorry, no posts matched your criteria.