India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகளான 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி தியாக்ஷ்மி நேபாள நாட்டில் நடைபெறும் சர்வதேச கராத்தே மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கிறார். இதையறிந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவியின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று தியாக்ஷ்மியிடம் ரூ.60 ஆயிரம் வழங்கினார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில். சிவன்மலை முருகன் கோயில். திருமுருகன் பூண்டி கோயில். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். ஊத்துக்குளி முருகன் கோயில். பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில். திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில். கருவலூர் மாரியம்மன் கோயில், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி, சந்தேகப்படும் வகையில் வந்த, வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன், 20 என்பது தெரிந்தது. சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று (மார்ச் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தெரிவிக்கலாம்.
திருப்பூர் அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.
2024 -ம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கையில், IQAir நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில் திருப்பூர் இடம் பெற்று தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் தெற்கு ஆசியாவில் 15- வது இடமும், இந்தியாவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ பங்கு முக்கியமானது குறிப்பிடதக்கது.
அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.
திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.
Sorry, no posts matched your criteria.