Tiruppur

News February 15, 2025

ரூ.46,004.98 கோடி கடன்: திட்ட அறிக்கை வெளியீடு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க நிர்ணக்கபட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையைக் காட்டிலும் ரூ.6,987.29 கோடி கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

News February 15, 2025

சிவன் மலை கோவில் சிறப்புகள்

image

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.

News February 15, 2025

‘சாலை விதிகளை மதிப்போம்’ காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதிவில் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து சிறு வயது முதலே கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அனைவரும் ‘சாலை விதிகளை மதிப்போம்’ எனவும் தெரிவித்துள்ளனர். அனைவரும் சாலை விதிகளை மதித்து குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News February 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

News February 14, 2025

‘ஆபத்தில் உதவிடு: புகைப்படத்தை தவிர்த்திடு’

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம், அவிநாசி ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவினை வெளியிட்டுள்ளார்கள். ஆபத்து நேரத்தில் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் உதவி செய்யுங்கள் அதை விட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலனில்லை, ‘ஆபத்தில் உதவிடு புகைப்படத்தை தவிர்த்திடு’ எனவும் கூறினர்.

News February 14, 2025

இரவு நேர ரோந்துபணி அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 14.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகளை அழைத்து தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

News February 14, 2025

திருப்பூரில் மூன்று பெட்டிக் கடைகளுக்கு சீல் 

image

திருப்பூர் ஆத்துபாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வேந்தன் என்பவரின் இரண்டு பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதேபோல் தனபால் என்பவரின் கடை உட்பட மூன்று கடை சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள்<> விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

திருப்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், குறைந்தபட்ச ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய நிறுவனங்கள் பங்கேற்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

News February 14, 2025

திருப்பூர் புகையிலை பொருள்கள் விற்ற 4 பேர் கைது

image

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே, போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மயில்வண்ணன்(44), கேதர்நாத் மாலிக்(34), துரைசாமி(63), சந்துரு(26) ஆகியோரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ 765 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!