Tiruppur

News April 20, 2025

திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 19, 2025

குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

image

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
 விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்

News April 19, 2025

வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 19, 2025

திருப்பூர்: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0421-2971117. ▶️திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி ஆணையர் (கலால்) 0421-2971103. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) 0421-2971177. இதை SHARE பண்ணுங்க.

News April 19, 2025

பனியன் துணி வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது

image

திருப்பூர் காந்திநகரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் ராமசாமி. இவரிடம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி, பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் ராமசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 18, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 18, 2025

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 18, 2025

திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் மாவட்ட அளவிலான 21நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம்
நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், வருகிற 24ம் தேதி, மாலை 6 மணி வரை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில், பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை
கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!