India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் வஞ்சிபாளையம் அருகே பிஏபி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஆறு பேரில் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் ஐந்து பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா.கிருஸ்துராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு மாநகராட்சி பகுதிகளில் ஆய்வில் தகுதியற்ற சுமார் 75 கிலோ அளவிலான மற்றும் 7கிலோ அளவிலான சமைத்த கெட்டுப்போன, உட்கொள்ள முடியாத இறைச்சியை உணவகத்திலிருந்து கைப்பற்றி, பினாயில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். காங்கேயம், உடுமலை, அவினாசி, பல்லடம், தாராபுரம் ஆகிய பகுதிகளின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர அழைப்புக்கு 108 ஐ அழைக்கவும்.
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்துக்கான நூல் விலையில் மாற்றமில்லாமல் பிப்ரவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணகுமார் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று முதல் சோதனை அடிப்படையில் அங்கேரி பாளையம் சாலையை ஒரு வழி சாலையாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து அங்கு இன்று காலை முதல் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்,முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு கூட்டம் வருகிற 4-ந் வரும் 11 மணிக்கு திருப்பூர் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூரை சுற்றி வெளிப்புற ரிங் ரோடு அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் ரிங் ரோடு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகளை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் அறிவித்திருக்கிறது. இது திருப்பூர் மாநகரத்தின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாநகர காவல் துறை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. அங்கேரிபாளையம் சாலையிலிருந்து குமார் நகர் புஷ்பா வரும் வாகனங்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக குமார் நகர் செல்லமுடியும். அங்கேரிபாளையத்திலிருது வரும் வாகனங்கள் ஆணையர் அலுவலக சந்திப்பிலிருந்து வலது புறம் அவிநாசி சாலைக்கு செல்ல முடியாது, குமார் நகரிலிருந்து அங்கேரிபாளையம் செல்ல 60 அடி சாலையை பயன்படுத்த வேண்டும்.
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களையும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
Sorry, no posts matched your criteria.