Tiruppur

News March 11, 2025

லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட இடையம்பாளையம் பகுதியில் சிட்டாவில் பெயர் சேர்க்க 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 11, 2025

நாளை கடைசி நாள்!

image

திருப்பூர் இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை ஷேர் செய்யவும்.

News March 11, 2025

பல்லடம் கொலை: 100 வது நாள் ஆகியும் மர்மம்

image

திருப்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 100 நாட்கள் ஆகியும் தற்பொழுது வரை விடை கிடைக்காமல் விசாரணை நீண்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள். அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த நவ.29ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 18 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இது வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

News March 11, 2025

குண்டம் திருவிழா: ரூ.5 லட்சம் மதிப்பில் இன்சூரன்ஸ்

image

திருப்பூர், பெருமாநல்லூர் ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோவில் 2025 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவின்போது பக்தர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் இன்ஷூரன்ஸ் செய்து அமைதியான முறையில் குண்டம் திருவிழா நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

News March 10, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் உள்ள இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News March 10, 2025

திருப்பூரில் வேலை: ரூ.20,000 சம்பளம்

image

திருப்பூரில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஊதியம் <<>>ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 10, 2025

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள் 

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 741 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

திருப்பூரில் 14 மருந்தகங்களுக்கு உரிமம் ரத்து

image

திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என மருந்து கட்டுப்பட்ட ஆய்வாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 2024 ஜனவரி மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை திருப்பூர் மாவட்டத்தில் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்து விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு தற்காலிகமாகவும் மூன்று மருந்துகளுக்கு நிரந்தரமாகவும் உரிமம் ரத்து.

News March 10, 2025

பின்னலாடைக்கு வந்த சோதனை

image

“டாலர் சிட்டி” எனப்படும் திருப்பூரில் ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

error: Content is protected !!