India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

திருப்பூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திருப்பூரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூரில் 256.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமோன். பனியன் தொழிலாளி. இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என உடன் வேலை செய்பவர்களிடம் கூறி வருவது வழக்கம். சமீபத்தில் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வந்தவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வெல்டிங், பேப்ரிகேஷன் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க வங்கிக்கடன் மற்றும் மானியக்கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். தொடர்புக்கு 94890 43923 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர், செல்போன் எண்களை சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பொத்தியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன் (74). இவர் நேற்று மாலை அவரது மொபட்டில் தாராபுரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது ஜே. நகர் பகுதியில் சென்ற போது, மொபட் மீது லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சாமியப்பன், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.