India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாடமி மற்றும் தாராபுரம் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூர் முத்தணம்பாளையம் ஆக்ஸ்போர்டு மாடர்ன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் 9,12,15 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் மாணவ-மாணவிகளும், ஓபன் பிரிவில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ ட்ரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பில் கல்லூரி சாலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கட்டாய இறக்கு கூலி 2,000 முதல் 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வரும் 5ஆம் தேதி முதல் இறக்கு கூலி வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) +2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் 221 பள்ளிகளில் 28 ஆயிரம் மாணவர் மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் அச்சமின்றி தேர்வை எழுத வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில், அவரை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுபோன்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்பொழுது போதி நிதி ஒதுக்காத காரணத்தால் சில மாதங்களாகவே இயந்திரங்கள் பழுது காரணமாக ஆலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் புனரமைப்பு நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆலையை புனரமைக்க 160 கோடி தமிழக அரசுக்கு நிதி ஒதுக்க ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.
திருப்பூர் மாநகரின் குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கவும், வெளி மாநிலங்களிலிருந்து திருப்பூரில் புழக்கத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சா, கான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கண்டறியவும் திருப்பூர் மாநகர போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பேருந்து நிலையம, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் சுழற்சி முறையில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நல்லூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். நிகழ்வில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு, நாளை (3ம் தேதி) துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் என, 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 25 ஆயிரத்து 863 பேர் எழுத உள்ளனர். இதில், 11 ஆயிரத்து 874 மாணவர்கள்; 13 ஆயிரத்து 989 மாணவியர் அடங்கும். தனித்தேர்வர்களாக, 379 பேர் தேர்வெழுதுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் வஞ்சிபாளையம் அருகே பிஏபி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஆறு பேரில் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் ஐந்து பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா.கிருஸ்துராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு மாநகராட்சி பகுதிகளில் ஆய்வில் தகுதியற்ற சுமார் 75 கிலோ அளவிலான மற்றும் 7கிலோ அளவிலான சமைத்த கெட்டுப்போன, உட்கொள்ள முடியாத இறைச்சியை உணவகத்திலிருந்து கைப்பற்றி, பினாயில் ஊற்றி அழித்தனர்.
Sorry, no posts matched your criteria.