Tiruppur

News March 4, 2025

மாவட்ட காவல் துறையினரின் இரவு பணி ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் காவல்துறையின் இரவு பணி ரோந்து விபரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 4, 2025

 வெறிநாய்கள் கடித்து 11ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசுகவுண்டன் தோட்டம் செல்வபாரதி என்பவரின் 11குட்டிகள் 1 செம்மறி வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 4, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு வங்கி கடன் குறித்த முகாம்

image

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான வங்கி கடன் திட்ட விழிப்புணா்வு முகாம் கலெக்டா் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரா்கள் நல அதிகாரிகள் மற்றும் வங்கிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்று, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தவா்களுக்கு சுய தொழில் உள்ளிட்டவைகள் தொடங்க உள்ள சலுகைகள் குறித்து தெரிவித்தனர்.

News March 4, 2025

திருப்பூரில் தனியார் மினி பஸ் – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசின் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் 85 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 85 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் ரூ.1600 கட்டணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மார்ச் 15 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News March 4, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் , பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லங்கள் வருகின்ற 20-ஆம் தேதிக்குள் இணையதள போர்ட்டல் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

திருப்பூரில் 294 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தேர்வு துறையில் நடத்தப்படுகின்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் முதல் நாள் தேர்வினை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 294 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2025

ஊத்துக்குளி அருகே வைரலாகும் அதிமுகவின் நோட்டீஸ்

image

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்ற தொகுதியை சார்பில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வருகின்ற ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அறிவிப்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக தங்க நாணயம் மற்றும் 300 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 3, 2025

மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு அழைப்பு

image

திருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி சத்யம் கிளினிக் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் அக்ரி எக்ஸ்போ-2025. இது வரும், மார்ச் 7, 8, 9 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது. நிகழ்வு நடைபெறும் இடம்: கலையரங்கம், மத்திய பேருந்து நிலையம் அருகில். வேளாண் புதுமை மற்றும் அதன் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 3, 2025

+ 2 பொது தேர்வு: வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு முதல்வர் தலைமையிலான இவ்வரசு என்றும் துணை இருக்கும் என்ற நம்பிக்கையோடு பதற்றமின்றி தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

News March 3, 2025

திருப்பூர் போஸ்ட் ஆபீஸில் வேலை..இன்றே கடைசி நாள்

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூரில் மட்டும் 95 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!