Tiruppur

News March 13, 2025

திருப்பூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்

image

திருப்பூர், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது நம்பிக்கை.

News March 13, 2025

31ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் செய்ய வேண்டும்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 86 சதவீதம் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்தது. மீதமுள்ளவர்களும் 10ஆம் தேதிக்குள் கைரேகை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என கூறினர்.

News March 13, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: திருப்பூர் ஆட்சியர் 

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 8,578 வைட்டமின் ஏ திரவ குப்பிகள் பெறப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

BREAKING: அவிநாசியில் இருவர் வெட்டிக்கொலை

image

திருப்பூர், அவிநாசி அடுத்த துலுக்க முத்தூர் பெரிய தோட்டம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த முதிய விவசாய தம்பதியான பழனிச்சாமி (80), பர்வதம் (70) என்ற இருவரையும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடு திறந்திருப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 13, 2025

ரேஷன் கார்டு – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில்பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை என்றால், அவர்கள் உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் www. www.mpds.gov.in இணையதளம் மூலமாக ரேஷன் கார்டை பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்

News March 13, 2025

மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

image

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 12, 2025

இரவு நேர ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 12, 2025

காடையூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (68). மூதாட்டியான இவர், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் இன்று அதிகாலை புகுந்த வெறி நாய்கள், பட்டியில் இருந்த 4 வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2025

திருப்பூர்: சுக்ரீஸ்வரர் கோயில்!

image

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.

News March 11, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!