Tiruppur

News June 17, 2024

திருப்பூர்: ஏடிஎம் கார்டு மோசடி… ஒருவர் கைது

image

தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற முத்துராஜ் என்பவருக்கு பணம் வராததால் அருகில் இருந்த மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு வேறு மையத்தில் பணம் எடுக்குமாறு சொன்னார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகாரளித்தார். இது குறித்த புகாரின்பேரில் பன்னீர்செல்வம் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 16, 2024

காங்கேயம் அருகே விபத்து: 4 பேர் படுகாயம்

image

காங்கேயம் அருகே அரசு பேருந்து – சரக்கு வேன் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
கொடுமுடியில் இருந்து காங்கேயம் வழியாக கோபிக்கு அரசு பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது. காங்கேயம் கரூர் ரோடு பிரிவு அருகே பேருந்து சென்றபோது எதிரே வந்த சரக்குவேன், பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 16, 2024

பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

image

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் எல்ஜி எஃப்ஐ தமிழ்நாடு கையுந்து பந்து அணிக்காக 5 பிரிவுகளில் 5 பேர் தேர்வு பெற்றிருந்தனர். மாணவிகளுக்கான தேசிய அளவில் நடந்த கையுந்து போட்டியில் நம்பியூரில் உள்ள குமுதா பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ரஞ்சிதா வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சான்றிதழ் வழங்கினார்.

News June 16, 2024

திருச்சி – பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

image

குளித்தலை லாலாபேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜீன்.20 பாலக்காடு – திருச்சி ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

News June 16, 2024

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு ,காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது .தற்போது வினாடிக்கு 87 கன அடியாக உள்ள நிலையில் மொத்த 90அடியில் 50.82 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

News June 15, 2024

திருப்பூர்: அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு

image

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் நிர்வாகிகள் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். கோவையில் நடைபெற உள்ள வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, செல்வராஜ் எம்எல்ஏ நேரில் சந்தித்து பொன்னாடை, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

News June 14, 2024

திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், மைய நிர்வாகி-1, களப்பணியாளர்-5 மற்றும் பல்நோக்கு உதவியாளர்-1 என மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. மேலும் தகவலுக்கு <>https://tamilnadujobnews.in/tiruppur-osc-recruitment-2024/<<>> என்ற இணையதள பக்கத்தை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 14, 2024

கோவில் கடைகளுக்க ஏலம் அறிவிப்பு

image

திருப்பூர், வெள்ளகோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  வீரக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தேங்காய், பழக்கடை மற்றும் சிதறு தேங்காய் சேகரிப்பு உரிமம் ஆகியவற்றிற்கான ஏலம் வரும் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவில் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் இன்று தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

திருப்பூர்: கூட்டணி கட்சிகளுக்கு எம்பி நன்றி

image

உடுமலை அருகே தேவனூர் புதூரில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் எரிசனம்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News June 13, 2024

ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பர்பாளையம் முதலாவது மண்டலத்திற்குட்பட்ட 9 வீதிகளுக்கு பெயர் பலகை இல்லாததால் முகவரி சொல்வதில் குழப்பம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் 9 வீதிகளுக்கும் பெயர் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

error: Content is protected !!