India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க, திருப்பூர் வருகை தர உள்ளார். அரசின் வளர்ச்சி திட்டங்கள் மாவட்டத்தில் எந்த அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகரில் இன்று (12.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, தொழில்வரி, உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து, வருகின்ற 18ஆம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தின் சில பகுதிகள் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளையும் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருப்பூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், ரூ.1.30 கோடியில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் படகு சவாரி துவங்கப்பட்டது. படகு இல்லத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் ‘பாதுகாப்பு & கண்காணிப்புக்குழு’ ஆய்வில், படகு சவாரியின் போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், மீட்பு படகு தயார் நிலையில் இல்லாததால், தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவது. திருப்பூர் மக்களே உங்க பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த அவந்திக்கா மற்றும் மோனிகா இருவரும் கல்லூரி தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், இருவரும் தனித்தனியாக இருக்குமாறு, அவந்திகாவின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று இருவரும் அவந்திகாவின் வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானியம் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறு தானியம் சார்ந்த உணவுகள் சமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் காய்கறிகளில் விலங்குகள், கடவுளின் உருவங்கள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தாராபுரம், திருப்பூர், உடுமலை என மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிந்து இருந்தாலும், ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் செயல்பட்டு வருகின்றது. திருப்பூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டிசம்பர் மற்றும் 25ம் ஜனவரி மாதங்களில் ஆய்வு அறிக்கை அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.