Tiruppur

News August 3, 2024

ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

image

பெங்களூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 16ஆம் தேதி பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சுபாஷ் என்ற நகை வியாபாரியிடம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்டனர். இதற்காக தமிழக டிஜிபி இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

News August 3, 2024

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

image

திருப்பூர், போயம்பாளையம் அருகே மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை தீ எரிய தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மள மளவென குப்பை கிடங்கு முழுவதும் எரிய தொடங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

News August 3, 2024

தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர் மரியாதை

image

தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அலுவலகத்தில் தீரன் சின்னமலை யின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

News August 3, 2024

அமைச்சர் சாமிநாதன் இபிஎஸ்ஸுக்கு பதிலடி

image

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதம் என எடப்பாடி பழனிசாமி
நேற்று அறிக்கை விடுத்து இருந்தார். இதற்கு அமைச்சர் சாமிநாதன் இன்று விடுத்து உள்ள அறிக்கையில், அணையின் முக்கிய நீர்வரத்தான காண்டூர் கால்வாய் பாரமரிப்பு பணிகள்
தீவிரமாக நடைபெறும். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது வேடிக்கையானது என தெரிவித்தார்.

News August 3, 2024

காங்கேயத்தில் திருப்பூர் கலெக்டர் மலர்தூவி மரியாதை

image

சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலையின் 219வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை சமுதாய நலக்கூடத்தில் அவரது உருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

News August 3, 2024

திருப்பூர் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

நேபாளத்தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்துகொண்ட ஆசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். நேற்று திருப்பூர் திரும்பிய அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News August 3, 2024

TNPL திண்டுக்கல்லிடம் வீழ்ந்த திருப்பூர் அணி

image

TNPL 2வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியும், திண்டுக்கல் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர், 19.4 ஓவர்கள் முடிவில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 10.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (ஆக. 4) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோவை அணியை எதிர் கொள்ள உள்ளது.

News August 3, 2024

திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

image

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 2, 2024

வெள்ள பாதிப்பிற்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மழைப்பதிவு குறித்த உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தந்த தாலுகா அலுவலக தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி நாளை ஆக.3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. ➤கழிப்பறையில் வடமாநிலநபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் நாளை அரசியல் கொடி, பேனர் வைக்க போலீசார் தடை. ➤அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!