Tiruppur

News July 16, 2024

திருப்பூர் மாவட்டத்தில் 178 மிமீ மழை பதிவு

image

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்துவந்தது. மாநகரின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

கனவு இல்லத் திட்ட வீடு ஆணை வழங்கிய அமைச்சர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பழுதுபார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணைகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், பொள்ளாச்சி எம்பி உடன் இருந்தனர்.

News July 16, 2024

கலைஞர் கனவு இல்லத் திட்ட வீடு ஆணை வழங்கிய அமைச்சர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்கள் உட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பழுதுபார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணைகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொள்ளாச்சி எம்பி கலந்து கொண்டனர்.

News July 15, 2024

ஆசிரியர்களுக்கு கையடக்க கணிப்பொறி வழங்கல்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சிகள் இன்று கல்வித்துறை சார்பில் இடை நிலை கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முறையில் கையடக்க கணினிகளை அமைச்சர் சாமிநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த நிதியாண்டில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்து இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை குறிச்சிக்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இத்திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

News July 15, 2024

திருப்பூர்: ரயில் சேவையில் இன்றுமுதல் மாற்றம்

image

சேலம் ரயில்வேயில் பராமரிப்பு பணி காரணமாக திருப்பூர் வழியாக செல்லும் சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலப்புழா-தன்பாத் தினசரி ரயில், எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஜூலை 16 (நாளை), 18, 20, 23, 25, 27, 30 தேதிகளில் கோவை வழியாக இயக்காமல் போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவையில் நிறுத்துவதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

News July 14, 2024

விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். இதில் நிலக்கடலைக்கு 636 ரூபாயும், சோளத்திற்கு 100 ரூபாயும் செலுத்தி ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

News July 13, 2024

திருப்பூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!