India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கைத்தறி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மிதியடிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 20 சதவீத தள்ளுபடியில் இந்த பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் மாவட்ட மண்டலம் மற்றும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. திருப்பூர் புதூர் பிரிவு பகுதியில் மோகன் என்பவர் தனது இல்லத்தில் இருந்தவாறு தேசிய கொடிகளை உற்பத்தி செய்து வருகிறார். 10 இன்ச் முதல் 60 இன்ச் வரை தயாரிக்கப்படும் தேசியக்கொடிகள் 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் குறித்து காவலர்களிடையே கேட்டறிந்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் மிகப்பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் பின்னலாடை தொழிலுக்கு போட்டி நாடான வங்கதேசத்தில் மிகப்பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை ஆர்டர்கள் திருப்பூருக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து?
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றதை அடுத்து நேற்று திருப்பூர் மாநகரில் உள்ள 9 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி தெற்கு காவல் நிலையத்திற்கு ஹரிகிருஷ்ணன், வீரபாண்டி காவல் நிலையத்திற்கு சுரேஸ் உள்ளிட்ட 9 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் நடக்கும்
கல்விக்கடன் முகாம் தொடர்பாக கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகேயன், கடன் ஆலோசகர் வணங்காமுடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின் கோழிக்குஞ்சுகள் (1 பயனாளிக்கு 40 கோழிகுஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் பெறலாம். இதனை ரூ.3200 கொடுத்து கொள்முதல் செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்கு அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அனுக வேண்டுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், முதலிபாளையம் சிக்கா பகுதியில் அமைந்துள்ள நிஃப்ட் டி ஆடை வடிவமைப்பு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை இன்று சந்தித்தனர். திருப்பூரின் வரலாறுகளை திருப்பூர் மாநகரின் சுவர்களில் ஓவியமாக வரைந்து அழகுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆலோசனை மேற்கொண்டனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.