India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கொழுமத்தில் உள்ள திருக்குமரன் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் அரசுத்துறை சார்ந்த பல்வேறு சேவைகளை பெரும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. மேலும் பொது மக்களிடம் இருந்து துறைவாரியாக மனுக்களும் பெறப்பட்டது.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியின் குரூப்-1 பிரிவில் திருப்பூர் குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா பங்கேற்றார். இதில் 50 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியின் சார்பில் விளையாட அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் ஆட்சியில் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் உடன் கலந்து கொள்ளலாம். மேலும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <
திருப்பூர் காமநாயக்கன்பாளையம் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சித்ரா என்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த நடிகர் ரஞ்சித் இந்த விபத்தை பார்த்துள்ளார். உடனடியாக காரில் இருந்து இறங்கி பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியநல்லூர், கொழுமங்குளி, ஜோதியம்பட்டி, கெத்தல்ரேவ் மற்றும் சிறுகிணர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதியான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் national.awardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.