India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஈரோட்டை சேர்ந்த லோகநாதன், காங்கயம் நாட்டார்பாளையத்தில் தங்கித் தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகன் அஸ்வித், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காங்கயம் GHக்குக் கொண்டு சென்றும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குண்டடம் அருகே பூங்கொடி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து குண்டடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் அங்கமுத்து குருசாமி மனைவியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று அவரை முதல் குற்றவாளியாகக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.16) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் உறைபனி காரணமாக, பொதுமக்கள் அனைவரும் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பனிப்பொழிவால் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளிலும் பொது இடங்களிலும் சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
Sorry, no posts matched your criteria.