Tiruppur

News August 11, 2024

திருப்பூர் மக்களுக்கு ரூ.1 கோடியில் புதிய சுற்றுலா தளம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்றுபொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை. இந்நிலையில் மாநகர பகுதியிலுள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.இதில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

News August 11, 2024

திருப்பூர் மக்களே.. உடனே முந்துங்கள்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிராமங்களில் நிரந்தரமாக வசிக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனளிகளுக்கு 3,200 செலவில் கொள்முதல் செய்யும் திறன் உள்ள பணியாளா்களுக்கு 50% மாணியத்தில் 40 கோழி குஞ்சுகள் வழங்கப்படும். கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழி குஞ்சு 50% மானியத்தில் வழங்கப்படுகின்றது. எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

நாளை திருப்பூர் வரும் அமைச்சர் மா.சு

image

திருப்பூர் வேலம்பாளையத்தில் அரசு மருத்துவனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை நாளை காலை 11 மணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு செய்ய இருக்கிறார். மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் போன்றவை சரியாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்கிறார்.

News August 10, 2024

திருப்பூரில் போலீசார் சஸ்பெண்ட்

image

திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சிறப்பு எஸ்ஐ மருதப்ப பாண்டியன் மற்றும் அவரது ஓட்டுநர் குரு ஆகியோர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த வாலிபரிடம் 7000 ரூபாய் பணம், பீர் பாட்டில்கள் மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் ஆகியவற்றை பறித்ததால் காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News August 10, 2024

நாளை திருப்பூர் வரும் அண்ணாமலை

image

திருப்பூரில் நாளை 11ஆம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். நாளை நடைபெறும் இக்கூட்டத்தில், அண்ணாமலை லண்டன் செல்ல உள்ள நிலையில் அதன்பிறகு கட்சியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News August 10, 2024

திருப்பூர் மக்களே இந்த தேதியை மறக்காதீங்க

image

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினமான வருகிற 15ம் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது பகுதிகள் சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

திருப்பூரில் தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 4715 மாணவர்களுக்கு வங்கிப்பற்று அட்டைகளை அமைச்சர் பெ.சாமிநாதன் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டபேரவை உறுப்பினர் மற்றும் மேயர் முன்னிலை வகித்தனர்.

News August 10, 2024

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் 

image

திருப்பூர், தாராபுரம் டூ பொள்ளாச்சி சாலையில், காரில் சென்று கொண்டிருந்த போது கோவிந்தாபுரம் அருகே எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்து நடைபெற்றது. விபத்தில் சிக்கிய நபர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மீட்டு 108 அவசர ஊர்தியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இலா.பத்மநாதன் உடன் இருந்தார்.

News August 9, 2024

ஆமை வேகத்தில் புதிய பேருந்து நிலையம்

image

உடுமலையில் கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களுக்கு முன் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் பல வருடங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டை கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News August 9, 2024

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

image

திருப்பூர், மடத்துக்குளம் தொகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து உடுமலைப்பேட்டையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!