Tiruppur

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் பொறுப்பேற்பு

image

கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 14, 2024

சமாதான புறாவை பறக்கவிடும் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9.5 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக் கொடியேற்றுகிறார். தொடர்ந்து சமாதான புறாவை பறக்க விடும் அவர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்குகிறார். 

News August 14, 2024

காங்கேயத்தில் நாளை FREE SHOW

image

திருப்பூர் காங்கேயம் சாலை டிமார்ட் அருகில் அமைந்துள்ள பொதிகை மஹாலில் நாளை சுதந்திர தினத்தன்று மாலை 5 மணிக்கு குரங்குபெடல் திரைப்படம் திரையிடல் மற்றும் திரை கலைஞர்களுக்கான பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News August 14, 2024

பல்லடம் கொலை வழக்கு: மேலும் மூவர் கைது

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வினோத் கண்ணன் கடந்த 8ஆம் தேதி பல்லடம் கரையான் புதூர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சுரேஷ், அஜய் தேவன் மற்றும் தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News August 14, 2024

1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் இணையதளங்களின் வாயிலாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை முன்பாகவே கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வங்கி அதிகாரி போன்று தொலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் ஒரு போதும் பகிரக்கூடாது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

News August 14, 2024

திருப்பூரில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு 

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 14, 2024

உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு

image

திருப்பூரில் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் லட்சுமி நகரில் நடந்தது. இதற்கு சங்க தலைவர்  நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் வருகிற 19ம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவனங்களில் டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

error: Content is protected !!