Tiruppur

News August 23, 2024

மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தினை அதிகாரிகள் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லட்சுமி, மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை கமிஷனர்கள் சுஜாதா, யாதவ் அசோக் கிரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 22, 2024

திருப்பூர் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤உடுமலை அருகே மர்மவிலங்கு நடமாட்டம்
➤உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
➤திருப்பூரில் வக்கீல்கள் நாளை புறக்கணிப்பு போராட்டம்
➤எரகாம்பட்டி மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
➤திருப்பூரைச் சேர்ந்தவர் வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி
➤பல்லடம் அருகே கிராவல் மண் கடத்த முயன்ற லாரிகள் சிறை பிடிப்பு
➤நத்தக்காடையூரில் குடிநீர் திட்ட பணி – அதிகாரிகள் ஆய்வு

News August 22, 2024

லாரிகள் சிறை பிடிப்பு! பல்லடம் அருகே பரபரப்பு

image

பல்லடம் அருகே பொன் நகர் பகுதியில் வண்டல் மண் அள்ளுவதாக கூறி கிராவல் மண் கடத்த முயன்றதாக இன்று இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் வட்டாட்சியா் ஜீவானந்தம் மற்றும் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 22, 2024

திருப்பூரைச் சேர்ந்தவர் வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி

image

திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மத்திய – மாநில அரசுகள் இதுகுறித்து, மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புதிய சாலை அமைத்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டி கடத்தவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

News August 22, 2024

புகையிலை பொருட்கள் விற்ற 11 கடைகளுக்கு சீல்

image

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 22, 2024

சிவன்மலையில் கலெக்டர் நடைப்பயிற்சி 

image

திருப்பூர், காங்கேயம் அருகே சிவன்மலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மலைக்கோவில் உள்ளது. இதில் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் காங்கேயம் யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், சப் கலெக்டர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ், ஏபிஆர்ஓ மனோஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News August 22, 2024

உடுமலையில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

image

உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பழனியைச் சேர்ந்த பிரவின், ஆதித்யா இருவரும் கல்லூரி முடிந்து நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பின. அப்போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஆதித்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 21, 2024

தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறி விதைகள் விற்பனை

image

மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறி விதைகளை நேரடியாக விற்பனை செய்கிறது. கீரை, தக்காளி, வெண்டை, கத்திரி, பொரியல் தட்டை போன்ற ஐந்து விதமான காய்கறி விதைகள் ரூபாய் 50/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.

News August 21, 2024

ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்க நிதி உதவி

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சீர் மரபினர் நவீன ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்க தேவையான நிதியில் மூன்று லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்ட அலுவலகத்திற்கு வரவும் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

News August 21, 2024

அரசு மருத்துவ கல்லூரியில் ஆலோசனைக் கூட்டம்

image

மேற்கு வங்க மாநிலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாநகர துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் கலந்து கொண்ட பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!