India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் கோல்டன் நகர் கரு நாகபுரி விநாயகர் கோவில் அருகில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சதீஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சண்முக பாண்டியராஜன், சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
➤திருப்பூரில் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் கைது
➤திருப்பூரில் ஒடிசா தொழிலாளி தற்கொலை
➤கிருஷ்ணாபுரம் கோவில் கும்பாபிஷேக விழா எம்எல்ஏ பங்கேற்பு
➤திருப்பூரில் 3 போலீசார் உட்பட ஆறு பேர் அதிரடி கைது
➤மடத்துக்குளம் BUS STAND-இல் குப்பைகள் தேக்கம்
➤காங்கேயத்தில் யூனியன் அலுவலக ஊழியர்கள் போராட்டம்
➤நாச்சிபாளையத்தில் வேன் கவிழ்ந்து விபத்து
திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல இளநிலை பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார். இவர் ஒப்பந்ததாரிடம் பில் பாஸ் செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்த நிலையில் மீதம் ஒரு லட்ச ரூபாயை கொடுப்பதற்கு முன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்று லஞ்சம் பெற்றபோது இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ரமேஷ் மொகந்தி என்ற தொழிலாளி திருப்பூர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் 25 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். திடீரென தற்கொலை செய்து கொண்ட அவருக்கு திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் முறைப்படி புகார் அளித்து ஆவணங்கள் பெற்று நல்லடக்கம் செய்து பெற்றோர்களுக்கு நிவாரணம் பெற்று வழி அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். விவசாயம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகள் என 135 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் கேரளாவில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்துள்ளார்.
அங்கு அடகு வைக்கும் நகைகளை போலியாக தயார் செய்து திருப்பூரில் உள்ள நண்பரின் மூலமாக திருப்பூர் வங்கியில் அடைமானம் வைத்துள்ளார். இந்த மோசடி குறித்து கேரள மாநில போலீசார் இன்று இருவரையும் கைது செய்து, திருப்பூரில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து 496 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறை சென்று ஆய்வு செய்தனர்.
பயணிகளின் வசதிக்காக பெங்களூரு முதல் கொச்சி வேலி திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 2 மணி 2:15 மணிக்கு கொச்சு வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் குடிசைகளுக்குப் பதிலாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் நேற்று அவரது ரசிகர்கள், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் கட்சி கொடியேற்றினர். தவெக மத்திய மாவட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், திருப்பூரில் கட்சிக்கொடி இல்லாத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம் என்றார்.
Sorry, no posts matched your criteria.