India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் கணியாம்பூண்டியை தொழிலதிபர் ஒருவர், செல்போன் எண்ணை, ஒரு வாட்ஸ் அப் குழு இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த குழுவில் பேசிய நபர் ஒருவர், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த தொழில் அதிபர், பல்வேறு தவணைகளாக ரூ.27.25 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பின்பு தன் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சர்வதேச அளவிலான கராத்தேப் போட்டி, சென்னையிலுள்ள மான்ட்ஃபோர்ட் உள்விளையாட்டு அரங்கில் நேற்று (19/01/2025) நடந்தது. இதில் பங்கேற்ற பல்லடம் அட்வென்சர் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள், நகுலன் கட்டாவில், வெள்ளியும், விகாஷ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கட்டாவில் தலா ஒரு வெண்கலம் பெற்றனர். அவர்களை பயிற்ச்சியாளர் ராஜேஷ் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அதனை தடுக்கும் வகையில் போலீசார் இரவு ரோந்து அலுவலர் விவரங்களை தினந்தோறும் அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு திருப்பூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியாக பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் வட மாநிலங்களில் கும்பமேளா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்கு செல்ல வட மாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூரில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட தினமும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் விதமாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வங்கதேசத்தினர் யாரும் சட்ட விரோதமாக உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 12ஆம் தேதி முதலே திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொடர்ந்து நாளைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் திருப்பூர் திரும்பி வந்ததால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக குளிர் அதிகரித்து காணப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தாராபுரம் பகுதியில் 4 மி.மீ, மூலனூர் பகுதியில் 1 மி.மீ, குண்டடம் பகுதியில் 3 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 4 மி. மீ, உடுமலை பகுதியில் 6 மி.மீ, அமராவதி அணை பகுதி 24 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதி 8 மி.மீ, திருமூர்த்தி அணை உள்பகுதி 8 மி.மீ, மடத்துக்குளம் 6 மி.மீ மழை பதிவானது.

தேசிய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி – 2025, கிரிக்கெட் போட்டியை திருப்பூர் ‘ஸ்கூல் ஆப் கிரிக்கெட்’ நடத்துகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி – கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணிகள் வெற்றி பெற்று இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதி போட்டி மதியம், 12:30 மணிக்கு துவங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை 10 மணிக்கும், அமராவதி அணையில் நண்பகல் 12 மணிக்கும், திருமூர்த்தி அணை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் மதியம் 1 மணிக்கும் ஆய்வு செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வருகை தர உள்ளார் என மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஜிப் தயாரிப்பு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். வட மாநிலங்களில் இருந்து மூலப்பொருள் வாங்கப்பட்டு திருப்பூரில் தேவைப்படும் நிறங்களில் ஜிப் தயாரித்து அனுப்பிவருகின்றனர். நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் நேற்று 5 பேர் மீட்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.