India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2025ல், 8ம் வகுப்பு சேருவதற்கான நுழைவுத் தேர்வு வருகிறது டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகின்றது. www.rimc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு செப்.30-க்குள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பார்க் டவுன் சென்னை 600003 முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் முன்பதிவு செய்திட கால அவகாசம் வருகிற 2 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக உள்ளவர்கள்
https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு 95140 00777 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திராவிட விடுதலைக் கழகத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: வருகிற 7 ம் தேதி 12 ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தைத் தவிர புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை(29.8.24) அவிநாசி செம்பியநல்லூர் செந்தூர் மஹாலில் செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், பல்லடம் செம்மிபாளையம் கே.என்.புரம் விக்னேஷ் மஹாலில் சுக்கம்பாளையம், கே.அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, தாராபுரம் கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் மண்டபத்தில் மனக்கடவு பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் குரூப் 2 தேர்வுக்கு 123 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி தேர்வு நடைபெற்றது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளில் 3 மாதத்தில் சுமார் 385 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பட்டம் பாளையம், சொக்கனூர், தெரம்பலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தெரவலூர் ஸ்ரீஅண்ணமார் சாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது. இதே போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகா பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ரயில் பயணிகள் வசதியாக சென்னை சென்ட்ரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி சிறப்பு ரயில் இன்று 28ஆம் தேதி முதல் செப்-25ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் மாலை 3.45 புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். திருப்பூருக்கு இரவு 10.13-க்கு வந்தடையும். இந்த ரயிலை திருப்பூர் ரயில் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருப்பூரில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, பரம்பிக்குளம், சொமந்துறைச்சித்தூர், அலியார், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள். அதேபோல, பல்லடத்தில், கோத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல் ஆகிய இடங்கள் ஆகும்.
திருப்பூர் காலேஜ் ரோடு துவாரகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (80). இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்காக இன்று கல்லூரி சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது எதிரே வந்த ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.