Tiruppur

News January 25, 2025

திருப்பூரில் அதிக பானி பூரி சாப்பிட்டவர் கைது

image

திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் கோவில் வழி பேருந்து நிலையத்தில் மகாராஜா பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொடுத்த பணத்திற்கு அதிகமாக பேக்கரியில் பானிபூரி எடுத்து சாப்பிட்டுள்ளார். இதை தட்டி கேட்ட மகாராஜாவை மணிகண்டன் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் மணிகண்டனை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

News January 25, 2025

திருப்பூரில் வங்கதேசத்தினர் அடுத்தடுத்து கைது

image

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 28 வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வங்கதேசத்தினரும், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு வங்கதேச நபர்களும், நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வங்கதேச நபர்கள் என 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 25, 2025

திருப்பூரில் ஒரு ஆண்டில் 129 தீ விபத்துக்கள்

image

திருப்பூர் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதும் 129 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெற்கு தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாநகரில் வாகன விபத்து, கிணற்றில் தவறி விழுதல் உள்ளிட்ட உயிர் மீட்பு பணிகள் 671 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 25, 2025

ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

image

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசாரும் இரவு பகல் பாராமல் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 25, 2025

திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் அதிரடி கைது

image

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நல்லுர் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் மௌனிமுல் இஸ்லாம், ரஜனா பேகம் உள்ளிட்ட 8 பேர் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது தெரியவந்தது. 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 25, 2025

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குனர்

image

காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில், 21வது திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் நிகழ்வாக இன்று நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் கலந்துகொண்டு, நயம்பட உரை என்னும் தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வில் திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 24, 2025

நூதன பேனர் வைத்த பொதுமக்கள்

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டுவது வழக்கமாகி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ‘குப்பை கொட்ட கூடாது மீறினால் புகைப்படம் எடுத்து மீடியாவில் வெளியிடப்படும்’ என பேனர் வைக்கப்பட்டுள்ளது

News January 24, 2025

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர் 

image

பல்லடம் மங்கலம் சாலை தண்டாயுதபாணி கோவில் முன்பாக, சாலையில் உள்ள இரும்பு தடுப்பு உடைந்த நிலையில் காணப்படுவதால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என பல்லடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாதுரை, கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 24, 2025

திருப்பூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்த சண்முகப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2025

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!