Tiruppur

News January 28, 2025

திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 31 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அறை எண் 20-இல், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்டவா்களை தோ்வு செய்ய இருக்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www. tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசாரின் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 27, 2025

காதலியின் கழுத்தை அறுத்த மாணவன் தற்கொலை

image

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சினேகா 23 என்பவர், திருப்பூர் கருமாரபாளையம் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான தீபக், சினேகாவை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சினேகா மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று சினேகாவின் வீட்டிற்கு சென்ற தீபக், சினேகாவின் கழுத்தை அறுத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினேகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 27, 2025

திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஜன.28) காலை 9 முதல் மாலை 4 மணிவரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மன்னாரை, பரபாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைபாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம், ரெங்கிகோ. அதேபோல் <>உடுமலை <<>>பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2025

திருப்பூர் மாநகரக் காவல் 2ஆவது இடம்

image

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதில், முதல் இடத்தினை மதுரை மாநகர காவல் பெற்றது. இரண்டாவது இடத்தினை திருப்பூர் மாநகரக் காவல் பெற்றது. மூன்றாவது பரிசு திருவள்ளூர் மாவட்டக் காவலுக்கு வழங்கப்பட்டது.

News January 26, 2025

திருப்பூர் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருப்பூர் மாநகரில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்னலையில் திருப்பூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2025

தேசிய அளவில் வென்ற திருப்பூர் மாணவனுக்கு பாராட்டு 

image

தேசிய அளவிலான ஜூனியர் வாள் வீச்சுப் போட்டி உத்தரகாண்ட் பாட்னாவில் நடைபெற்றது. இதில் கேடட் வாள் வீச்சுப் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் மாணவன் மவுரிஸ் சாதனை படைத்துள்ளான். அவருக்கு வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 25, 2025

திருப்பூர் மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்க

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <>லிங்கை<<>> க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

திருப்பூர் மாணவர்கள் ஜூடோ போட்டியில் சாதனை

image

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுடோ போட்டியில், திருப்பூர் கே எஸ் சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 1 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 1 வெண்கல பதக்கம் வென்று பள்ளிக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 25, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 31ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டா் அலுவலக வளாக அறை எண் 240ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த  குறை தீர்க்ககும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!