Tiruppur

News February 1, 2025

திருப்பூர் பின்னலாடைக்கு ஆபத்து!

image

தொழில் நகரமான திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கு அதிகமாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், பட்ஜெட்டில், பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால், தொழில் நகரமாக திருப்பூரில் தயாரிக்கும் பின்னலாடை ரகங்கள் உற்பத்தி (ம) விற்பனை பாதிக்கப்படும்.

News February 1, 2025

பல்லடம் கொலை: 64 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை

image

திருப்பூர், பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 14 தனிப்படைகள் அமைத்தும் 64 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

News February 1, 2025

மத்திய ஜவுளித்துறை செயலாளரிடம் கோரிக்கை

image

திருப்பூர் வருகை தந்த மத்திய ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவ் உடன் ஏற்றுமதியாளர்கள் தையல் எந்திர ஆட்டோமேஷன் மற்றும் சாயமேற்றும் பிரிவு மேம்பாடுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். சூரியஒளி மின்சக்திக்கு 90 சதவீதம் மானியம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் பின்னலாடை துறைக்கு சர்வதேச கண்காட்சிகளில் பிரத்யேக சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

News February 1, 2025

இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பூரில் இருந்து இன்றும் நாளையும் 3 பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறுகளில் திருப்பூரிலிருந்து சிறப்பு பஸ் அந்த வகையில் கோவில் வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News February 1, 2025

பரவிய “வாட்ஸ் அப்” தகவல்: கலெக்டர் உத்தரவு

image

ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச பணம் காணாமல் போனதாக வெளியான “வாட்ஸ் அப்” தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், லஞ்ச பணம் காணாமல் போனதாக வெளியான “வாட்ஸ் அப்” தகவல் குறித்து ஆர்.டிஓ. விசாரணை நடக்குமென கலெக்டர் அறிவித்துள்ளார். 

News February 1, 2025

பாஸ்போர்ட் கேந்திரா மையம்: 240 பேர் விண்ணப்பம்

image

திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கடந்த 24ந் தேதி தொடங்கப்பட்டது. இங்கு தினமும் 40 பேருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 240 பேர் புதிதாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

News February 1, 2025

சம்பளத்துடன் விடுமுறை விட அறிவுத்தல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தில் வரும் 5ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், வாக்காளர்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ஆம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் கோரி தொழிலாளர் உதவிகமினர் அறிவுறுத்தியுள்ளார். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து 99446-25051 புகார் அளிக்கலாம்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

ஊர்காவல் படை பதவிக்கு விண்ணப்பிக்க எஸ்பி அறிக்கை

image

திருப்பூர் மாவட்ட ஊர்காவல் படையில் மண்டல தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 07.02.2025 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அல்லது அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

2 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு

image

தமிழக முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்களை டிஎஸ்பியாக பதவி உயர்வு செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரவணன் ரவை மற்றும் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!