Tiruppur

News February 6, 2025

விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில், டிரோன் மகளிர் திட்டத்தில், கேத்தனூர் கிராமப் பஞ்சாயத்தில் மனோரஞ்சிதம் அவரது செல்போன் எண் 9566615556 மற்றும் குண்டடம் வட்டாரம் சங்கரண்டாம்பாளையம் சரண்யா அவரது செல்போன் எண் 6369124725 என்பவருக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசி செயலி மூலமாக டிரோன் மகளிரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

மாணவியை அடித்த ஆசிரியரிடம் விசாரணை 

image

கேரள மாநிலம் மூனாரை சேர்ந்த மாணவி ஒருவர் உடுமலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை ஆசிரியை அடித்ததாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

News February 6, 2025

விடா முயற்சிக்கு பேனர் வைத்த தமிழக வெற்றி கழகத்தினர்

image

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடா முயற்சி திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவரது படத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில், திரையரங்குகள் முன்பாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகில் போட்டியாக கருதப்பட்ட நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது நட்பு பாராட்டி வருகின்றனர்.

News February 5, 2025

திருப்பூரில் விடாமுயற்சி வெளியாகும் தியேட்டர்கள்

image

▶ ஸ்ரீ சத்தி சினிமாஸ். ▶ தமிழ்நாடு தியேட்டர். ▶ டைமன்ட் தியேட்டர். ▶ எம்.பி.எஸ் தியேட்டர். ▶ சினிபேர்க் தியேட்டர். ▶ ஸ்ரீனிவாசா தியேட்டர். ▶சிவன் தியேட்டர். ▶ சக்தி தியேட்டர். ▶ கேஎஸ்பி தியேட்டர். ▶ வாரணாசி தியேட்டர் என ஆகிய தியேட்டர்களில் வெளியாகிறது.

News February 5, 2025

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு

image

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் உடுமலையில் பணியாற்றும் காவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடுமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ஜெய் கணேஷ் தளி காவல் நிலையத்துக்கும், அமராவதி நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் நாகராஜன் உடுமலைக்கும், குமரலிங்கம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில் மடத்துக்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 5, 2025

கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற அரசு பள்ளி மாணவி

image

பாரதியாரின் 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலைப்பின் மள்நோக்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைபோட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 3-ம் பரிசு பெற்ற பொங்கலூர் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும்7-ம் வகுப்பு மாணவி ஜெசிகா திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News February 5, 2025

திருப்பூரில் தற்காலிக பதவி உயர்வு 

image

திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் மூவருக்கு, தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், காங்கயம் வாணிப கிடங்கு உதவி மேலாளராக பணிபுரியும் கதிர்வேல், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராகவும், ‘ஓ’ பிரிவு தலைமை உதவியாளர் சபரிகிரி, பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 5, 2025

திருப்பூர் அதிமுக MLA கலெக்டரிடம் மனு

image

திருப்பூர் வேலம்பாளையத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடம் பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்காததால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கே.என்.விஜயகுமார் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. (அதிமுக) வலியுறுத்தி கலெக்டர் கிறிஸ்துராஜூவிடம் நேற்று மனு அளித்தார்.

News February 5, 2025

வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் மாணவி சாதனை

image

இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. தேசிய விளையாட்டு போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் ஒரு பகுதியாக யோகாசனப் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட திருப்பூர் வீராங்கனை யோகா வைஷ்ணவி கலை யோகாசன சிங்கிள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

News February 5, 2025

மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்திய பட்ஜெட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும், வழக்கமான கார்ப்பரேட் பட்ஜெட் ஆகவே இது அமைந்ததாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!