India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 7,069 பேரும், தமிழ்புதல்வன் திட்டத்தில் 4,608 பேரும் பயனடைந்து வருகிறார்கள். இது போன்று ஏராளமானவர்கள் அரசு திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்திருந்தார். கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, அமைச்சர் சுவாமிநாதன் நேரில் சந்தித்து வரவேற்றார். இதில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அதுபோல் ஆண்டிபாளையம் குளத்தில் படகுகள் வந்து விட்டன. இனி சவாரி துவங்குவது தான் பாக்கி’ என அறிவிப்புகள் வெளியாயின. தற்போது வரை படகு சவாரி துவங்கி, செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே இந்த குளங்களை சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வரும் 7ஆம் தேதி பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சேவூர், வடுகபாளையம், தெக்கலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக இன்று காலை கோவை வந்தார். அவரை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவருமான இல. பத்மநாபன் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் தீபாவளி பண்டிகை முடித்து தற்போது பணிக்கு திரும்பி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள், மறுவாழ்வுஉள்ளிட்ட பல்வேறு வகையான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களை அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி அர்ச்சனா திருவண்ணாமலையில் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கு பெற்றார். இவர் தற்போது தேசிய நீச்சல் போட்டிக்கு திருப்பூரிலிருந்து தேர்வாகியுள்ளார். இவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
புதுடில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து, 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு – 2 மாணவர் கோகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.