Tirupathur

News September 25, 2024

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குரைத்தீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் புகார் அளித்து திருப்தி பெறாத 3 மனிதர்களை நேரில் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து 47 புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்கள்.

News September 25, 2024

திருப்பத்தூர் அருகே புடவை இறுகி பள்ளி மாணவி மரணம்

image

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே 9-ம் வகுப்பு பள்ளி மாணவி இன்று மதியம் வீட்டின் அருகே இருந்த ஆட்டுக்கொட்டகையில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய கொண்டிருந்த மாணவி,புடவை கழுத்தில் இறுகியதால் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 25, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் வலைத்தளப் பதிவில், இன்று வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் பொதுமக்கள் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுங்கள் அல்லது வாகனம் ஓட்டிவிட்டு பாதுகாப்பான இடத்தில் மது அருந்துங்கள் என்பது குறித்தான விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளனர்.

News September 25, 2024

விவசாயிகளுக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவுரை

image

பிரதம மந்திரி கிசான் சமன் நிதி மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் நிதி உதவி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்குவது, ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைத்தல், திருத்தம் செய்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் போன்றவை செய்ய வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

News September 24, 2024

திருப்பத்தூர் அருகே பாலியல் தொழில்; 2 பெண்கள் மீட்பு

image

திருப்பத்தூர் நகர போலீஷ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது திருப்பத்தூர் மெயின் ரோட்டில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று 2 பெண்கள் மீட்டனர். மேலும் விபச்சார நடத்திய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வன் என்பவர் கைது.

News September 24, 2024

திருப்பத்தூரில் 3190 மாணவர்கள் விண்ணப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயின்ற கல்லூரி மாணவர்கள் 3190 மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் படிக்கும் கல்லூரி அலுவலகத்தை அணுகி படிவத்தினை பெற்று பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெளியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக ரெயின் கோர்ட், குடை ஆகியவற்றை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 24, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

image

திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம், துதிப்பட்டு, தெக்குப்பட்டு ஆகிய பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு தடுப்பு பணிகளில் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொசு மருந்து அடித்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நீர் தேங்காத வண்ணம் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவித்தப்பட்டுள்ளது.

News September 24, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்களாக பணியாற்றி வந்த 16 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடி பிறப்புத்துள்ளார். மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனுக்குடன் உரிய இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 24, 2024

நாட்டறம்பள்ளியில் நடுவழியில் நின்ற பேருந்து

image

நாட்டறம்பள்ளியில் இருந்து கல்லூரி மாணவிகள் பர்கூரில் உள்ள அரசு கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டறம்பள்ளி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பங்களாமேடு என்ற இடத்தில் சென்ற போது ரேடியேட்டரில் பஸ் அங்கேயே பழுதாகி நின்றது. இதனால் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு கல்லூரி மாணவிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

error: Content is protected !!