Tirupathur

News March 31, 2024

திருப்பத்தூரில் எடப்பாடி பிரச்சாரம்

image

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2 ஆம் தேதி திருப்பத்தூர் அவுசிங் போர்டு காந்தி சிலை அருகே திறந்த வேனில் பிரச்சாரம் செய்கிறார் என திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

திருப்பத்தூர் அருகே அரிவாள் வெட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் இரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (58). சொத்து பிரச்சினை காரணமாக முருகேசனை அவரது சித்தப்பா பேரன் மது மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று அரிவாளால் வெட்டினர். இதில் தலை, முழங்கையில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி புத்துக்கோயிலில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மு.ஊராட்சி மன்ற தலைவர் சீனன் மற்றும் நிர்வாகிகளுடன் ஜோலார்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் க‌.உமாகன்ரங்கம் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். உடன் ஒன்றிய பொருளாளர் திருப்பதி, சிவகுமார் கிளை செயலாளர் மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

தி.மு.க பணப்பட்டுவாடா இருவர் மீது வழக்கு

image

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் பணப் பட்டுவாடா செய்ததாக பறக்கும் படையினர் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் சூர்யா மற்றும் பாரதி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 31, 2024

6 அடி நீளம்… படமெடுத்த நாகம்

image

நாட்டறம்பள்ளி அடுத்த வள்ளியூர் கிராமத்தில் கருணாமூர்த்தி என்பவரது குடியிருப்பு வீட்டில் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

News March 30, 2024

ஜோலார்பேட்டை: மாவட்ட எஸ்பி ஆய்வு

image

ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ள வக்கணம்பட்டி, பால்னாங்குப்பம்,  ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News March 30, 2024

திருப்பத்தூர்: உயிர் தப்பிய பயணிகள்

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

News March 30, 2024

திருப்பத்தூர்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

சேலம் சங்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு இன்று ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் திருப்பத்தூர் நோக்கி சென்றபோது ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். 

News March 30, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

News March 30, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து:ஒருவர் பலி

image

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் ஜாவித் (28). இவர் நேற்று (மார்ச்.29) வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து தானபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!