India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின் ஊழியர்கள் இரவு 11 மணிக்கு மேல் மின் இணைப்பை சரி செய்தனர்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமானது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்ற திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் M. R. அப்ரோஸ் இன்று அக்கட்சியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் K C. வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு சால்வை அணிவித்து கே.சி.வீரமணி வரவேற்றார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் விலகிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே சகாயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் கல்வி துறையில் கண்காணிப்பு அலுவலராக ஒய்வு பெற்றவர்.இயற்கை உபாதை கழித்துவிட்டு வாளியில் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியே கொட்டும் அவல நிலையில் கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வருகிறார்.சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கால்வாய் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்கவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்
அரக்கோணம் ரயில்வே போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (33). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். நேற்று வேலை காரணமாக ரயிலில் சென்று ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆய்வாளர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உதவி காவல் ஆய்வாளர் பாராட்டுகளையும் மற்றும் ரூ5000 ரொக்கம் வழங்கி சிறப்பித்தார். உடன் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பலர் உள்ளனர்.
ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணம் வினியோகம், தேர்தல் விளம்பரம் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், உதவி தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் சுவர்களில் பல்வேறு கட்சிகளின் சின்னங்களை விளம்பரம் செய்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி வாணியம்பாடி அருகே பதற்றமான வாக்குச்சாவடிகள் கோணமேடு , கோவிந்தபுரம், முஸ்லிம்பூர் , தும்பேரி, அழிஞ்சி குளம், கவுக்கப்பாட்டு , பெத்தகல்லுபள்ளி , செட்டியப்பனூர், மதாஞ்சேரி , ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை இன்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாரி ஊராட்சியைச் சேர்ந்த மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளராக இருந்து வந்த கே ஜி ரமேஷ் என்பவர் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவுக்கு மாவட்டத்தில் தீயாக வேலை செய்த முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர்.
நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அதிமுகவில் தொண்டராக பணியாற்றி தற்போது திருப்பத்தூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.