India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்.19 அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்த வாக்கு சதவீதம் உடைய வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேடுகளை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தர்ப்பகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிராஜ் தலைமையிலான பறக்க படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே நடந்து வந்த நபர் கையில் வைத்திருந்த பையை சாலையில் வைத்து திடீரென ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பறக்கும் படை குழுவினர் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 70 பாட்டில்கள் இருந்துள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் அருகே அலங்காநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 81). இவர் இன்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள கதிர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசை மீறியவர்கள் நலனில் பாஜகவுக்கு ஒரு துரும்பு கூட அக்கறை இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (34). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பயன்படுத்தப் பட்டு வரும் பேஸ்புக் வலைப்பதிவில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை பதிவிடுவதன் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களிடம் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.