Tirupathur

News April 13, 2024

ஆம்பூர் அருகே விபத்து

image

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2024

ஓடும் ரயிலில் பெண் உயிரிழப்பு

image

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூனா லக்ரா மின்ஜ் (50). இவர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் நோக்கி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்தார். விவேக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 13, 2024

12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் தனியார் கல்லூரி பேராசிரியர் மோகன் காந்தி, முன்னாள் கல்வெட்டு துறை இயக்குனர் வெங்கடேசன், காணி நிலம் முனுசாமி ஆகியோர் ஜவ்வாது மலைப்பகுதியில் பெரும்பள்ளி ,கல்லாவூர் ஆகிய ஊர்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வரலாற்று சிறப்புமிக்க 3 நடு கற்களை கண்டறிந்தனர்.  நடுகல் கிபி 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் இது 6 அடி உயரம், 4 அடி அகலமும் உள்ளது.

News April 12, 2024

காவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் புஷ்பராஜ் மற்றும் முத்து மாணிக்கம் ஆகியோர் தலைமையில் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதி மொழியை காவல்துறை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

News April 12, 2024

திருப்பத்தூரில் 106.88 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசுகிறது. இன்றைய தினம் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், பங்குனி மாத வெயில் சுட்டெரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News April 12, 2024

திருப்பத்தூர்: சமத்துவ உறுதிமொழி நாள் ஏற்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14ஆம் தேதி விடுமுறை என்பதால் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

News April 12, 2024

சொந்த பணத்தை செலவழித்து தன்னந்தனியாக போராடுகிறேன்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை ஆதரிப்பதாகவும் சொந்தக் காசை செலவழித்து தன்னந்தனியாக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

News April 12, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நிறைவு

image

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள விவி பேட் இயந்திரத்தில் பெயர், சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அரை மூடி சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

News April 11, 2024

வாணியம்பாடி: முன்னாள் அமைச்சரின் வாகனம் சோதனை

image

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற போது காரை நிறுத்தி மத்திய ரிசர்வ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News April 11, 2024

 குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர்

image

திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் இன்று அப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயம் செய்து கொள்ள குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர் தரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதனை பயன் படுத்தி கொள்ளுமாறு சங்கம் செயலாளர் ஆனந்தன் தகவல் தெரிவித்துள்ளார். ‌

error: Content is protected !!