India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் தாலுகா கந்திலி காவல் நிலையத்தில் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீர் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் செல்வதாக, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் – சிங்கம்புணரி சாலை எம். கோவில்பட்டியில் உள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் 2024 தேர்வில் மாணவன் அறிவொளி பிரபாகரன் தேர்வில் 630 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டாவது இடத்தில் 585 மதிப்பெண் பெற்று மாணவி சோபியா ஜாஸ்மின், மூன்றாவது இடத்தை 550 மதிப்பெண் பெற்று மாணவன் டேவிட் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜனதாபுரம் செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பனங்காட்டூர் ஊராட்சி மாரியம்மன் கோயில் (ஜூன் 5.நேற்று இரவு 12 மணிக்கு) திருவிழா முன்னிட்டு கோயில் திடல் ஸ்பீக்கர் வைத்து பாட்டு போட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்ததை சுரேன் அவரது மனைவி பவித்ரா சென்று தூங்க முடியவில்லை அதிக சத்தமாக பாட்டு போட்டு நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதற்கு பவித்ராவை பிடித்து கீழே தள்ளி விட்டதால் ஆத்திரமடைந்த சுரேன் சூர்யா ஆகியோர்.1.
வாணியம்பாடி தாலுகா அம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இன்று காலை 11 மணியளவில் விவசாய நிலத்திற்கு குறைந்த வாடகைக்கு டிராக்டரை பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் துவக்கி வைத்தார். உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு எழுத்தர் கோவிந்தராஜ் விவசாயிகள் கிருபாகரன் தண்டபாணி சபிதா வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல்துறை சார்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர் முகாம் வரும் ஜூன் 26-ம் தேதி, காலை 11 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார்.
ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 5.45 மணிக்கு மேம்பாலம் தடுப்பு மீது ஆம்பூர் சாலையில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த லாரி தடுப்பு மீதி மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்ட கேலோ இந்தியா கால்பந்து மையத்தில் கால்பந்து பயிற்றுநருக்கான காலி பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான கால்பந்து பயிற்றுநர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 40-வயதுக்குட்பட்டவர்கள் ஜோலார்பேட்டை அரசு சிறு விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜுன் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.