India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரை சேர்ந்த குகநாதன் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார். கடன் தொல்லை அதிகரித்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி கற்பகம், மகள் சுபிக்ஷாவை நிதி நிறுவன ஊழியர்கள் கடனை அடைக்க கூறி தொந்தரவு செய்ததால் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆவணங்கள், கோப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, வழக்குகளை நிலுவையில் இல்லாதவாறு முடிக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இருந்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருப்தி பெறாத புகார் மனு மீது நேரடி விசாரணை நடைபெற்றது. இதில், வாணியம்பாடியைச் சேர்ந்த 4 கள்ளச்சாராய வியாபாரிகள் இனிவரும் காலங்களில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யமாட்டோம் எனவும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறும் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருப்தி பெறாத புகார் மனு மீது நேரடி விசாரணை நடைபெற்றது. மேலும், 28 புகார் மனுக்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஆம்பூர் அருகே உமராபாத் போலீஸ் எல்லையில் உள்ள பாலூர் ஊராட்சி பகுதியில உதயகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட ஆக 2 ஆம் தேதி இரவு வெடிகுண்டு வைத்த வழக்கில் பாலூர் ஊராட்சி குப்பபாளையம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சரத்குமார் (27) மற்றும் பாலூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (50) ஆகிய 2 பேரை உமராபாத் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமார் நேற்று மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கள ஆய்விற்க்கு பிறகு ஆட்சியர் அலுவகலக கூட்டரங்கில் பேசிய அவர்; தாலுகாவிற்கு 5 தையல் கார்மெண்ட்ஸ்களை உருவாக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் பற்றி அறிவுரை வழங்கினார்.
ஆம்பூர் தாலுக்கா மாதனூர் அடுத்த ஜமீன் பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வரும் தனியார் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்பூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறப்பு செயற்குழு கூட்டம் நாளை மாலை 6 மணி அளவில் ஆலாங்குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் விசிக வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் இன்று 06.08.24 செவ்வாய்கிழமை மக்களுடன் முதல்வர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் செ.வில்வநாதன் பங்கேற்று பொதுமக்களுக்கு மதிய உணவினை வழங்கினார் இந்த நிகழ்வில் உடன் மாதனூர் சேர்மன் சுரேஷ்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.