Tirupathur

News August 21, 2024

திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர் மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர், குறைந்தபட்சமாக நாட்டறம்பள்ளி பகுதியில் 2.10 மி.மீட்டர் மழை பெய்தது. ஆம்பூரில் 8.20 மி.மீ, காவலூரில் 22 மி.மீ, வாணியம்பாடியில் 19 மி.மீ, நாட்டறம்பள்ளியில் 2.10 மி.மீ, திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர் மழை பெய்ததாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஷ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முகத்தை வைத்து (Deep fake) தொழில்நுட்பம் மூலமாக வேறொருவர் வீடியோவுடன் இணைத்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

News August 21, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முகத்தை வைத்து (Deep fake) தொழில்நுட்பம் மூலமாக வேறொருவர் வீடியோவுடன் இணைத்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

News August 20, 2024

ஆம்பூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்

image

ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது. மேலும் 8 மாதம் கர்பமாக இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் இல்லாததால் அந்த சிறுமி பாட்டி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

News August 20, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?

News August 20, 2024

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 345 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, சாலை வசதி ,சுகாதார வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 345 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை வகித்து பெற்றார். இந்த நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனி துணை ஆட்சியர் பெலிக்ஸ்ராஜா முன்னிலை வகித்தனர்.

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு

image

திருப்பத்தூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. திருப்பத்தூர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 81 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏரளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

திருப்பத்தூர் எம்எல்ஏ-வை வழக்கில் சேர்க்க உத்தரவு

image

திருப்பத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நில அபகரிப்பு மனுவில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லத்தம்பி தலையீடு இருந்ததால் அவர்களது நிலம் பறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் திருப்பத்தூர் எம்எல்ஏவு-க்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News August 20, 2024

திருப்பத்தூரில் கூடிய பெண்களால் பரபரப்பு

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆட்சியர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை பெற முகாம் நடைபெறுகிறது என சமூக வலைதளங்களில் வந்த வதந்தியையெடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன் குவிந்ததனர். இதனால் ஆட்சியர் அலுவலகமனாது கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. மேலும், அவர்களிடம் ஆட்சியர் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

News August 20, 2024

திருப்பத்தூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று திங்கட்கிழமை 12 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்த ஒரு உண்மைத்தன்மையற்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும் தவறான தகவல்களை சட்டப்படி குற்றம் எனவும் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் தகவல்களை பகிர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!