Tirunelveli

News December 18, 2024

இருக்கன்துறை கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து

image

இருக்கன் துறை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று(டிச.18) மண் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் இந்த சரிவில் சிக்கி உள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவரையும் மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும் பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்துள்ளனர்.

News December 18, 2024

பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் 

image

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவில் மைதீன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முன்னிட்டு பள்ளக்கால் புதுகுடி பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

News December 18, 2024

துப்பாக்கிசூட்டில் நெல்லை வாலிபர் பரிதாப பலி 

image

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வாலிபர் விக்னேஷ் இறந்துள்ளார். அவரது உடலை நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை ஆட்டியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் இன்று(டிச.18) வலியுறுத்தினர். அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

News December 18, 2024

நெல்லையில் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும்,வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சபடியை நீதிமன்ற உத்தரவுப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து கூட்டமைப்பு சட்டங்களின் சார்பாக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

News December 18, 2024

நெல்லையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

image

கேரளாவிலிருந்து பயோ மெடிக்கல், இறைச்சி கழிவுகளின் குப்பைகள் தென் மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை, நடுக்கல்லூர் பகுதியில் கொட்ட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் 8 நாட்களாகியும் அகற்றப்படாமல் இருந்தன. தற்போது, மாநகராட்சி நிர்வாகம்  கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடர் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நோய்த்தொற்று பரவாவல் இருக்க கழிவுகளை தரம் பிரித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் தகவல்.

News December 18, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

*இன்று(டிச.18) காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. *மாநகர காவல் துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. *அரசு பொறியியல் கல்லூரியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நான் முதல்வன் திட்ட திறன் மற்றும் பிளேஸ்மெண்ட் செல் திறப்பு விழா நடைபெறுகிறது.

News December 18, 2024

நெல்லை: மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் சிறிய மாற்றம்

image

திருநெல்வேலி மாநகர் மாவட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கு புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நில ஆர்ஜிதம் நடைபெற்று வருகிறது. இத்திட்ட பகுதி நாரணம்மாள்புரம் வடக்கு பகுதியில் தொடங்குவதற்கு பதில் தாழையூத்து இந்தியா சிமெண்ட் ஆலை அருகே பண்டாரகுளம் பகுதியில் துவங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிச் சுமை குறைக்க இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

News December 18, 2024

கேரள கழிவு விவகாரம்: முன்னாள் MLA இன்பதுரை சாடல்

image

ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இன்று(டிச.,17) ‘X’ தளத்தில் செய்தி ஒன்று பகிர்ந்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, நமது கனிமங்களை கேரளாவுக்கு கடத்தி சென்று கொட்டுவதும், பதிலுக்கு கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி கழிவுகளை நெல்லை மாவட்டத்திற்குள் தடையின்றி கொண்டு வந்து கொட்டுவதுமாக கொட்டமடிக்கும் விஷ கிருமிகளை அடக்காமல் அரசு கும்மி கொட்டுது. இவ்வாறு அரசை சாடியுள்ளார்.

News December 18, 2024

நெல்லையில் கேரள கழிவுகள்: குற்றவியல் நடவடிக்கை

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிசம்பர் 17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

News December 17, 2024

அகஸ்தியர் அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி

image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள அகஸ்தியர் அருவி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.தற்போது வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்து நாளை (டிச.18) முதல் சுற்றுலா பயணிகளை வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளனர். 

error: Content is protected !!